ஞாயிறு, 16 மே, 2010

பிரான்ஸ் நாட்டின் நிதியுதவியுடன் சேலைன் உற்ப்பத்தி

இலங்கையில் பிரான்ஸ் நாட்டின் நிதியுதவியுடன் சேலைன் உற்ப்பத்தி செய்யும் நடவடிக்கைகள் இவ்வருட இறுதிக்குள் ஆரம்பிக்கப்பட்டு விடுமென்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் இலங்கையில் சேலைன் உற்ப்பத்தி செய்வதற்கான திட்டத்தை ஆரம்பிப்பதற்காக சகல அறிக்கைகளும் தயாரிக்கப்பட்டுவிட்டதாகவும் கடந்த 6மாதகாலத்தினுள் பூர்வாங்கப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுவிடுமெனவும் அமைச்சர் தெரிவித்தார் சேலைன் உற்ப்பத்திக்கென பிரான்ஸ் அரசாங்கத்திடமிருந்து 6.4மில்லியன் யூரோ கடனாக கிடைக்கப்பெற்றுள்ளது தேவையான இயந்திர உபகரணங்கள் மற்றும் பயிற்சிகளை பெற்றுக்கொடுக்க பிரான்ஸ் அரசாங்கம் முன்வந்துள்ளது இதன்படி 1வருடத்திற்கு தேவையான 7.2மில்லியன் சேலைன் போத்தல்களை உற்ப்பத்தி செய்வதே சுகாதார அமைச்சின் இலக்காகும் இதுவரை சேலைன் போத்தல்களை இறக்குமதி செய்வதே சுகாதார அமைச்சின் இலக்காகும் இதுவரை சேலைன் போத்தல்களை இறக்குமதி செய்யவென வருடாந்தம் 260 மில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவிட்டு வருகிறது இதேவேளை அரசாங்க வைத்தியசாலைகளில் சேலைன் பற்றாக்குறையை நிவர்த்திக்கவென விமானப்படை விமானம் மூலம் 37ஆயிரம் கிலோ சேலைன் இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது

கருத்துகள் இல்லை: