வியாழன், 20 மே, 2010

நக்சலைட்டுக்களுக்கு எதிராக நடவடிக்கை இலங்கைப் படையினர் பயிற்சிகளை வழங்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய நக்சலைட்டுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு ஆலோசனை வழங்கத் தயார் என இலங்கை அறிவித்துள்ளது. விடுதலைப் புலிகளை கட்டுப்படுத்தியதன் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்ளத் தயார் என இலங்கை, இந்தியாவிடம் தெரிவித்துள்ளது. நக்சலைட்டுக்களுக்கு எதிராக வெற்றிகரமான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு இந்திய துணை இராணுவக் குழுக்களுக்கு, இலங்கைப் படையினர் பயிற்சிகளை வழங்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனிடம் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். நக்சலைட்டுக்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பிரதேசங்களிலிருந்து அவர்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது தொடர்பில் மட்டும் இலங்கை அரசாங்கம் உதவி வழங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

கருத்துகள் இல்லை: