வெள்ளி, 21 மே, 2010

இன்று ராஜீவ் காந்தியின் 19ஆவது நினைவு தினமாகும்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 19ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. கடந்த 1991ஆம் ஆண்டு மே 21ஆம் திகதி இரவு தேர்தல் பிரசாரத்திற்காக சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூருக்கு வந்த ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார். இன்று ராஜீவ் காந்தியின் 19ஆவது நினைவு தினமாகும். இதையொட்டி இன்று காலை சத்தியமூர்த்தி பவனில் உள்ள ராஜீவ் காந்தி படத்துக்கு மாநில காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தலைமையில் மலர் அஞ்சலிசெலுத்தப்பட்டது. இரத்ததான முகாமுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அன்று நீங்கள் தங்கத் தாம்பாளத்தில் இணைந்த வடகிழக்கு மாகான அரசு தந்தீர்கள் அதை கோடரிக்காம்புகள் குதறித்தள்ளி விட்டனர். ஈழத்தமிழ் இனத்தின் உண்மையான ஒரே நண்பன் நீங்கள் தான் என்பதை வரலாறு காட்டி விட்டது

கருத்துகள் இல்லை: