சனி, 13 மார்ச், 2021

காங்கிரஸ் 21 வேட்பாளர்கள் பட்டியல் . மீதி? இன்னும் அடிதடி முடியவில்லை!

No photo description available.

dailythanthi.com : சென்னை திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வேட்பாளர்கள் பட்டியல் காங்கிரஸ் தரப்பில் அதிகாரபூர்வமாக இன்னும் வெளியிடப்படவில்லை.
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே எதிர்ப்பு தெரிவித்து சத்தியமூர்த்தி பவனில் போராட்டம் நடைபெறுகிறது.
கட்சியில் இருந்து வெளியேறி மீண்டும் இணைந்தவர்களுக்கு சீட் கொடுக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறி ஒரு தரப்பினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
வேட்பாளர் பட்டியல் தொடர்பாக சத்தியமூர்த்தி பவனில் மூன்று கோஷ்டிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
விளவங்கோடு தொகுதியில் விஜயதரணியை வேட்பாளராக களமிறக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து ஒரு காங்கிரஸ் கோஷ்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

21 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் :

 பொன்னேரி (தனி)- துரை சந்திரசேகர், ஸ்ரீபெரும்புதூர் (தனி)- செல்வப்பெருந்தகை, சோளிங்கர்- முனிரத்தினம், ஊத்தங்கரை (தனி)- ஆறுமுகம், கள்ளக்குறிச்சி (தனி)- மணிரத்தினம், ஓமலூர்- மோகன் குமாரமங்கலம், ஈரோடு (கிழக்கு)- திருமகன் ஈவேரா, உதகமண்டலம்- கணேஷ், கோவை (தெற்கு)- மயூரா எஸ்.ஜெயக்குமார், உடுமலைப்பேட்டை- கே.தென்னரசு, விருத்தாச்சலம்- எம்.ஆர்.ஆர்.ராதாகிருஷ்ணன், அறந்தாங்கி- ராமச்சந்திரன். காரைக்குடி- எஸ்.மாங்குடி, மேலூர்- டி.ரவிச்சந்திரன், ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி)- மாதவ ராவ், சிவகாசி- அசோகன், திருவாடானை- கருமாணிக்கம், ஸ்ரீவைகுண்டம்- அமிர்தராஜ், தென்காசி- பழனி நாடார், நாங்குநேரி- ரூபி.ஆர்.மனோகரன், கிள்ளியூர்- ராஜேஷ் குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதேபோல், இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் மறைந்த ஹெச்.வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டி.

விளவங்கோடு, குளச்சல், வேளச்சேரி, மயிலாடுதுறை ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


காங்கிரஸ் கட்சியின் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.
தேவையின்றி களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாக கே.எஸ்.அழகிரி ஆதரவாளர்கள் போட்டி உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
இதுகுறித்து விஷ்ணு பிரசாத் கூறும்போது, ''காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தங்களது உறவினர்களுக்குத் தொகுதியைக் கேட்டுப் பெறுகிறார்கள். தமாகாவிலிருந்து விலகி மீண்டும் காங்கிரசில் இணைந்தவர்களுக்கு தொகுதி வழங்கப்படுகிறது. இந்த காங்கிரஸ் பேரியக்கம் ராகுல் காந்தியின் ரத்த வியர்வையால் வளர்ந்த கட்சி. கட்சியைக் காட்டிக் கொடுத்தவர்களுக்கு சீட் வழங்குவதில் என்ன நியாயம்? உண்மையாக உழைப்பவர்களுக்குத் தொகுதிகளை வழங்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
ஜோதிமணி எம்.பி கூறும் போது தொண்டர்களின் இரத்தத்தை குடிக்கும் மனசாட்சியற்ற தலைவர்கள் நியாயத்தின் குரலை செவிமடுக்கவில்லை. இந்த தலைவர்கள் தொண்டர்களுக்கு மட்டுமல்ல தன்னை நம்பிய தலைவருக்கும் துரோகம் செய்கிறார்கள். பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் சீட் பெற முடியும் என்பது அக்கிரமம் என கூறினார்.
தமிழக காங்கிரஸ் கட்சியில் வாரிசுகளுக்கும், பண பலத்துக்குமே முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என்று மாநில மகளிர் காங்கிரஸ் முன்னாள் தலைவி ஜான்சிராணி குற்றம் சாட்டியுள்ளார்.
:

கருத்துகள் இல்லை: