புதன், 10 மார்ச், 2021

இந்தி ஆதிக்கத்தை அடித்து நொறுக்க தொடங்கிய மம்தா பானர்ஜி

செல்லபுரம் வள்ளியம்மை :  மம்தா பானர்ஜி களம் குறித்து விட்டார் .
வடஇந்திய தொலைக்காட்சிகளில் இவ்வளவு அதிகமாக ஆங்கில சப் டைட்டிலோடு செய்தியை ஒளிபரப்புவது இப்போதுதான் என்றெண்ணுகிறேன்.
வழக்கமாக மேற்குவங்க அரசியல்வாதிகள் மம்தா உட்பட ஹிந்தி உருது மக்களுக்கும் புரியவேண்டும் என்று ஹிந்தி உருது பாதி வங்கமொழி பாதி என்றுதான் பேசுவார்கள்
எப்படி இந்தி படங்களில் அதிகம் ஆங்கில சொற்களை கலந்து பேசுவார்களோ,
அது போல மேற்குவங்க அரசியல் தலைவர்களும் பேசுவார்கள்
எனவே இந்தி உருது மக்களுக்கு புரிவதில் எந்த சிக்கலும் இருக்காது.
இந்த நடைமுறைக்கு ஒரு முடிவு கட்டிவிட்டார் மம்தா பானர்ஜி.
நூறுவீதம் தனி வங்காள மொழியில் பிச்சு உதறுகிறார்,
விழி பிதிங்கிய டைம்ஸ் நவ் தொலைக்காட்சி ஆங்கில சப் டைட்டில் போடுகிறது
அதுமட்டுமல்ல விவாதமும் கூடுமானவரை இந்தி கலக்காமலேயே ஆங்கிலத்தில் நடக்கிறது.
இவர்களுக்கு தெரியும் ஆங்கில விவாதங்களில் இந்தி ருதுவை கலந்தால் அவர்கள் வங்க மொழியை கலந்து பேசுவார்கள்   
ஆம் வங்க மக்கள் தயாராகி விட்டார்கள்
மீண்டும் ஒரு தடவை மம்தாவின் பேச்சுக்களை நோக்குங்கள்.புரியும்.
இந்தி மேலாதிக்கத்திற்கு மேற்கு அடி கொடுக்க தொடங்கி விட்டது.       

கருத்துகள் இல்லை: