திங்கள், 9 நவம்பர், 2020

என் குழந்தைகளை ஏன் கொன்றேன்? லண்டன் தமிழ் குடும்பஸ்தர் வாக்குமூலம்

என் குழந்தைகளை ஏன் கொன்றேன்? லண்டன் தமிழ் குடும்பஸ்தர் வாக்குமூலம்

எஸ்.பி.எஸ். தமிழ்: தானில்லாத காலத்தில் தனது பிள்ளைகள் கஷ்டப்படக்கூடாது என்ற காரணத்தினாலேயே பிள்ளைகளை கொலைசெய்துவிட்டு தற்கொலை செய்துகொள்ள திட்டமிட்டதாக லண்டனில் தனது இரண்டு பிள்ளைகளினதும் கழுத்தை கத்தியால் வெட்டிக்கொன்றுவிட்டு தனது கழுத்தையும் வெட்டி தற்கொலை செய்துகொள்ள முயன்று உயிர்தப்பிய இலங்கையை சேர்ந்த குடும்பஸ்தர் கூறியுள்ளார். 

லண்டனின் கடந்த ஏப்ரல் 16 ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட நடராஜா நித்தியகுமார், தனது நாலு வயது மற்றும் 19 மாதக் குழந்தைகளை கத்தியால் வெட்டி படுகொலை செய்தார். அப்போது குளியலறையிலிருந்த அவரது மனைவி வந்து பார்த்தபோது, பிள்ளைகளும் நித்தியகுமாரும் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டிருந்தனர். அவசர சிகிச்சைப்பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நடராஜா நித்தியகுமாருக்கு எதிராக தற்போது கொலைக்குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது. 

அவருக்கு எதிரான விசாரணையின்போதே மேற்கண்டவாறு கொலைக்கான தனது காரணத்தை கூறியுள்ளார். தான் பணிபுரிந்த வேலையில் வாடிக்கையாளர்கள் ஏற்படுத்திய மனஅழுத்தமும் இதற்கு ஒரு காரணம் என்று கூறியுள்ளார். அவரது மனைவி தனது சகோதரியுடன் நீதிமன்றில் முன்னிலையாகி சாட்சியத்தை வழங்கினார். 

குற்றஞ்சாட்டப்பட்ட நடராஜா நித்தியகுமார் சம்பவம் இடம்பெற்ற கணத்தில் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும் என்னசெய்வதென்றே தெரியாமல் நடந்துகொண்டிருக்கிறார் என்பதும் மருத்துவரின் ஊடாக தெரிவிக்கப்பட்டிருந்தது. நடராஜா நித்தியகுமார் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் இதனை தெரிவித்தார். தீர்ப்பு வழங்கும் திகதியை எதிர்வரும் டிசெம்பர் 10 ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்துள்ளார். எஸ்.பி.எஸ். தமிழ்

கருத்துகள் இல்லை: