செவ்வாய், 16 ஜூன், 2020

கொரோனா வைரஸ் நோயாளிகள் உயிர் காக்கும் முக்கிய கண்டுபிடிப்பு .. டெக்ஸாமெத்தாசோன் Dexamethasone in COVID a game changer:

டெக்ஸாமெத்தாசோன் என்ற ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள மருந்து ஒன்று கொரோனா வைரஸ் தொற்றி தீவிர பாதிப்புக்கு உள்ளான நோயாளிகளின் உயிர் காக்கப் பயன்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது. மிக குறைந்த விலையில் பரவலாக கிடைக்க வாய்ப்புள்ள இந்த மருந்து கொரோனா வைரஸ் உயிரிழப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்கவல்லது என்பது தற்போது தெரியவந்துள்ளது.
மிக குறைந்த அளவு தரக்கூடிய ஸ்டீராய்ட் மருந்தான டெக்ஸாமெத்தாசோன், கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் என்று பிரிட்டன் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வுக் குழு ஒன்று இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருக்கிறது.
வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ள நோயாளிகள் உயிரிழக்கும் வாய்ப்பை மூன்றில் ஒரு பங்கு இது குறைக்கிறது என்றும், ஆக்சிஜன் செலுத்தப்படும் நிலையில் உள்ள நோயாளிகள் உயிரிழக்கும் வாய்ப்பை ஐந்தில் ஒரு மடங்கு குறைக்கிறது என்றும் இந்த ஆய்வுக் குழு கண்டுபிடித்துள்ளது.

Muralidharan Kasi Viswanathan  : Finally டெக்ஸாமெத்தாசோன் என்ற ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள மருந்து ஒன்று கொரோனா வைரஸ் தொற்றி, தீவிர பாதிப்புக்கு உள்ளான நோயாளிகளின் உயிர் காக்கப் பயன்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது.

மிக குறைந்த அளவு தரக்கூடிய ஸ்டீராய்ட் மருந்தான டெக்ஸாமெத்தாசோன், கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் என்று பிரிட்டன் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
வென்டிலேட்டரில் உள்ள நோயாளிகளுக்குக் கொடுத்தால் மூன்றில் ஒரு பங்கு மரணங்களைக் குறைத்திருக்கலாம் எனக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
பிரிட்டனில் கொரோனா வைரஸ் தொற்று தொடங்கிய காலத்தில் இருந்தே இந்த மருந்தைப் பயன்படுத்தியிருந்தால் 5 ஆயிரம் உயிர்களைப் பாதுகாத்திருக்க முடியும் என்கிறது இந்த ஆய்வுக் குழு.
ஏராளமான கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள ஏழை நாடுகளுக்கு இந்த மருந்து பெரிய அளவில் உதவியாக இருக்கும்.
இதில் மிக குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இது ஏதோ புதிய, விலை உயர்ந்த மருந்து அல்ல என்பதுதான். ஏற்கனவே சந்தையில் உள்ள, மிக மிக விலை மலிவான மருந்து இது.
அதாவது 20 மாத்திரைகளின் விலை வெறும் ரூ. 3.74 தான். இந்த மருந்து 1960களில் இருந்து பயன்பாட்டில் உள்ளது. ஆர்த்திரிட்டிசிற்கும் ஆஸ்துமாவிற்கும் அளிக்கப்பட்டுவந்த ஸ்டீராய்ட் மருந்து இது.
மனித உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும்போது, அந்தப் போராட்டம் அளவு கடந்து செல்லுமானால், அதுவே உடலுக்கு சேதம் ஏற்படுத்துவதாக மாறிவிடும். இந்த சேதாரத்தைத் தடுப்பதற்கு இந்த மருந்து உதவி செய்வதாகத் தெரிகிறது.
நோய்க்கு எதிராக உடல் ஆற்றும் மிதமிஞ்சிய எதிர்வினைக்குப் பெயர் 'சைட்டோகைன் புயல்' (cytokine storm). இந்த மிதமிஞ்சிய எதிர்வினை மரணத்தையும் ஏற்படுத்தக்கூடியது. இந்த சேதாரத்தைத் தடுப்பதற்கு இந்த மருந்து உதவி செய்வதாகத் தெரிகிறது.
தற்போது உலகில் கொரோனாவுக்கு ரெம்டிசீவர் மருந்து மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. இதன் விலை இன்னும் தெளிவாகவில்லை. இந்த மருந்து கொரோனா அறிகுறிகளை 15 நாட்களில் இருந்து 11 நாட்களாகக் குறைக்கிறது என்பது மட்டுமே தெரியவந்துள்ளது. மரணத்தைக் குறைக்கிறதா என்பதைப் பற்றி முழுமையாகத் தெரியவில்லை.
ஆனால், கொரோனாவைப் பொறுத்தவரை எதையும் முழுமையாகச் சொல்ல முடியாது என்பதையும் மனதில் கொண்டு இந்தச் செய்தியைப் படிக்கவும்.

கருத்துகள் இல்லை: