சனி, 20 ஜூன், 2020

மண்ணை காத்த கிழக்கு போராளிகளை கொல்ல ஆணையிட்ட பிரபாகரன்

Reginold  : புலித் தலைமையால் தனிமனிதர் என்று கருதப்பட்ட கருணா அம்மான் என்ற அந்தத் தனிமனிதனின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க
மனமில்லாத காரணத்தினால் முப்பது வருடகால தமிழீழப் போராட்டம் முப்பது மாதங்களுக்குள் முடிவுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது நாகரீக அரசியல் உலகத்திற்கு ஏற்றாற்போல நாங்களும் மாறுபட்டேயாக வேண்டிய ஈழப்போராட்ட வரலாற்றில் பெரிதும் தேவையானதொன்றாக இருந்தது. தலைவன் பிழை செய்யும்போது அதைச் சுட்டிக்காட்டும் மக்களாக நாம் அன்று ஒன்றுபட்டு இருக்கவில்லை. புத்திஜீவிகள், அரசியல் தலைவர்கள், என்று சுற்றிவரப் பலபேர் இருந்தும் தலைவர் பிரபாகரனின் தவறான அணுகுமுறைகளைச் சுட்டிக்காட்டக்கூடிய நிலை இல்லாததன் விளைவே தர்பா காட்டு வாழ்க்கையின் பக்கம் தலைவர் பிரபாகரனை அழைத்துச் சென்றது.
இலங்கையில் தமிழர் வாழ்க்கை இத்தனை நெருக்கடிகளைச் சந்திப்பதற்கும் யார்காரணம் ? இத்தனை அழிவுகளும் விளைவுகளும் யாரால் நடந்தது ? இதை எமது உலகத் தமிழினம் புரிந்து கொள்ள வேண்டும் ! தலைவர் பிரபாகரனுடன் 25 வருடங்கள் கருணா அம்மான் இருந்துள்ளார். இலங்கை, இந்திய ராணுவத்தினுடனான வெற்றிச் சண்டைகள் அனைத்தையும் கருணா அம்மானே முன்னின்று நடத்தியுமுள்ளார் மட்டக்களப்பு அம்பாரை பேராளிகளை ஒரு கட்டுக்கோப்பான உக்கிர படையணியாக கருணா அம்மான் வழிநடத்தியதன் விளைவாலேயே ஈழ விடுதலை போராட்டம் உலகத்த்தார்களால் அறியத் தொடங்கியது உலக அரசியலின் நவீன ஓட்டத்திற்கு ஏற்றாற்போல நாங்களும் அரசியலில் முதிர்ச்சி அடைய வேண்டியது காலத்தின் நியதியாகும். இதைத்தான் அன்று தலைவர் பிரபாகரனிடம் தனி ஒரு மனிதனாக இருந்து துணிந்து நின்று எடுத்துரைத்தார் கருணா அம்மான் அவர்கள்

இயக்கத்தின் செயல்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும், கொள்கைகளை மாற்ற வேண்டும், தனிநபர்படுகொலைகளை நிறுத்த வேண்டும், பொதுமக்களின் வீணான உயிரிழப்புக்களைத் தவிர்க்க வேண்டும். என்றெல்லாம் தலைவர் பிரபாகரனின் முகத்திற்கு முன்னே பேசக்கூடியவராக கருணா அம்மான் ஒருத்தரே இருந்தார். இருந்தாலும் அம்மானின் படைசேர்ப்பு, படைகுவிப்பு, படைகாப்பு, படை மீட்பு என்ற நுணுக்கமான தொடர் ராணுவ வெற்றிகளைக் கண்ட தலைவர் பிரபாகரன் எதுவுமே எதிர்த்துக் கதைக்க முடியாதவராக தொடர் பாராட்டுக்களையும் அடுத்த கட்ட நகர்வுகள் பற்றியுமே பேசுபவராக இருந்தார் அன்று கருணா அம்மான் புலிகளின் ராணுவப் பிரிவுத் தலைமைத் தளபதியாக இருந்து வடபகுதி முழுவதையுமே போர் நடவடிக்கை மூலம் புலிகளின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்திருந்தார். ஆனால் இன்று முழு நிலங்களையுமே புலிகள் இழந்துள்ளனர் களத்திலே முன்னணி மூத்த தளபதிகள் இருந்தும் மூக்குடைக்கப்பட்டதன் விளைவு என்ன ? எல்லோருமே மூச்சில்லாமல் போனதன் முடிவு என்ன?
ஆளுமையும் அதிஷ்டமும் உள்ள அந்த அம்மான் என்ற தனிதனிதன் களத்தில் இல்லாமல் போனதே இத்தனை அவலங்களுக்கும், விளைவுகளுக்கும் முடிவுகளுக்கும் காரணமாகும் ஆட்லறி ஏவுகணை, ஆகாய விமானங்கள் என்று ஆயுதவளங்களும் ஆட்பலமும் இருந்தால் மட்டும் போதாது. அதனை எல்லாம் நெறிப்படுத்தக்கூடிய ஆளுமையும், அதிஷ்டமும் உள்ள கருணா அம்மானின் போரியலின் சூத்திரங்களும், சூழ்ச்சிகளும் நன்கு தெரிந்திருக்க வேண்டும் அன்று கருணா அம்மானின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கேட்டிருப்பாரேயானால் இன்று இத்தனை மக்கள் இழப்புக்களும் அவலங்களும், போராளிகளின் அநாவசிய இழப்புக்களும் ஏன் தளபதிகளின் இழிவான பேரிழப்புக்களும் ஏற்பட்டிருக்க வாய்ப்பே இருந்திருக்காது. அம்மானின் கிழக்குப் படையணிகள் இல்லாத போர்க்களம் என்னவாச்சு ??
வன்னிக் காடுகளும் சண்டையிடும் என்று நம்பிய புலித்தலைமைக்கு அம்மானின் உதவி கிடைக்காது போனதால் அத்திவாரத்தோடு அழிக்கப்படும் நிலை ஏற்பட்டது ஒரு விடுதலைப் போராட்டத்திற்கு தளப்பிரதேசமும் மக்கள் ஆதரவும் இரு கண்களாகும். இரண்டையும் இழப்பதன் மூலமாக ஒரு விடுதலைப் போராட்டம் தோல்வியடைகின்றது. கருணா அம்மானின் பிளவோடு புலிகளின் நிலப்பரப்புக்கள் சுருங்கத் தொடங்கியது. வடிகட்டிய முட்டாள்களின் கதைகேட்டு தலைவர் பிரபாகரன் அம்மானை ஓரம்கட்டியதால் இன்று அதே அம்மான் இல்லாத போர்க்களத்தில் முப்பது வருடகால ஈழ யுத்தத்தை மூழ்கடித்து விட்டார் தலைவர் பிரபாகரன் உலகத் தமிழினமே எண்ணிப்பார் இந்த மாவீரன் சாதித்த சாதனைகளை.
வல்லரசு இந்தியன் ஆமியோடே போரிட்டு விரட்டியடித்தவன் தளபதி கருணா ஆனையிறவு மீட்டுக்கொடுத்தவன் கருணா ஓயாத அலை பெரும் சமரை வென்று சாதித்தவன் கருணா ஓநாய்களோடு மோதுபவன் அல்லடா கருணா மதம்கொண்ட யானைகளோடு மோதுபவண்டா கிழக்கு மண்ணில் பிறந்த கருணா .. எங்கள் மண்ணின் மைந்தன்...
By . Reginold

கருத்துகள் இல்லை: