புதன், 17 ஜூன், 2020

20 இந்திய ராணுவத்தினரும் ஆயுதங்கள் இன்றி சிக்கி உயிரிழந்தார்கள்?

JP Prakash: 20 இந்திய ராணுவ வீரர்கள், சீன இராணுவத்தால், எந்த துப்பாக்கி சூடும் செய்யாமல் கொல்லப்பட்டது எப்படி??
காரணம், சீன இராணுவத்தினர் இந்திய எல்லைப் பகுதிக்குள் பல வாரங்களுக்கு முன்பே ஊடுருவி ஆக்கிரமிப்பு செய்து தங்கி இருந்த இடத்திற்கு, ஒரு இந்திய ராணுவ மேஜர் அதிகாரியை எந்த விதமான ஆயுதங்களும் இல்லாமல் இந்திய வீரர்களுடன், பேச்சுவார்த்தை நடத்த சிலரது உத்தரவால் அங்கே அனுப்பியிருக்கிறார்கள்..
ஆயுதங்கள் எதுவும் இல்லாமல் சென்ற இந்திய வீரர்களை அங்கு ஏற்பட்ட மோதலில் அடித்து காயப்படுத்தி இருக்கிறார்கள் சீன ராணுவத்தினர்.. ஆயுதங்கள் எதுவும் கைவசம் இல்லாததால் இந்திய ராணுவ வீரர்களால் அந்த சூழலில் தங்களை தற்காத்துக்கொள்ள கூட முடியவில்லை... ஒரு போர் பதற்றம் இருக்கும் இடத்திற்கு எந்தவித ஆயுதமும் இல்லாமல் இந்திய ராணுவ வீரர்களை அனுப்ப காரணமானவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்..
அதேபோல சீன உயிரிழப்பு என்பது உறுதிப்படுத்தப்படாத தகவல்.. எந்த சர்வதேச மீடியாவிலும் எதிர் தரப்பினரின் உயிரிழப்பு குறித்த எந்த செய்தி இல்லை.. அங்கே அனைத்துவிதமான ஆயுதங்களுடன் இருந்த சீன ராணுவத்தினர், எந்த ஆயுதங்களும் இன்றி சென்ற இந்திய இராணுவ வீரர்களால் எப்படி தாக்குதலுக்கு உள்ளாகி இருக்க முடியும்?? இந்திய வீரர்களின் தியாகத்தை, அதனால் இந்திய மக்களிடையே ஏற்படும் கொந்தளிப்பை மட்டுப்படுத்த இப்படி உறுதிப்படுத்த முடியாத தகவல்களை சொல்கிறார்கள்..

கருத்துகள் இல்லை: