ஞாயிறு, 14 ஜூன், 2020

நடிகை ரம்யாகிருஷ்ணன்100 மது பாட்டில்களோடு பிடிபட்டார்! சாரதியை பிடிச்சு உள்ளே போட்டது போலீஸ் ...

துக்ளக்  "சோ" வின் அக்காள் மகள் நடிகை "ரம்யாகிருஷ்ணனும்" அவரது சகோதரியும் உள்ள காரை சோதனை செய்ததில் 24 பீர் பாட்டில்களும் ஜானிவாக்கர் ப்ளாக் லேபிள் ,ப்ளாக் லேபிள் ரெட் (அதாவது ஒரு ஓட்டுநர் சாப்பிடமுடியாத விலையுயர்ந்த சரக்கு) 8 பாட்டில்களும் இருக்கின்றன... சட்டப்படி கைதாகவேண்டிய நடிகையும் சகோதரியும் ஓட்டுனரை உடனடியாக ஜாமினில் அழைத்துச்செல்கின்றனர்.... பார்ப்பன நீதி

தினத்தந்தி : சென்னை அருகே நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் அவரது சகோதரி சென்ற காரில் இருந்து மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். சென்னை கொரோனா அச்சுறுத்தலால் சென்னையில் மதுபானக்
கடைகள் திறக்க தடை விதிக்கப்படுள்ளது. சென்னையைத் தவிர்த்து பிற பகுதிகளில் மதுபானக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிலர் சென்னையைத் தாண்டிச் சென்று மதுபாட்டில்கள் வாங்கி வருவதைத் தடுக்க சோதனைச் சாவடிகளில் வாகன சோதனையில் போலீசார்
ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் கிழக்கு கடற்கரைச்சாலையில் முட்டுக்காட்டில் உள்ள சோதனைச் சாவடியில் வியாழக்கிழமை இரவு வாகனசோதனை செய்துக் கொண்டிருந்த கானத்தூர் போலீஸார், அங்கு வந்த இன்னோவா காரை மறித்து, அதில் இருந்தவர்களிடம் சோதனையிட வேண்டும் என தெரிவித்தனர்.

அப்போது அந்த காரில் இருந்த நடிகை ரம்யா கிருஷ்ணன், அவரது சகோதரி வினயா கிருஷ்ணன் ஆகியோர் சோதனையிடுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். சோதனையில் அந்த காரில் 96 பீர் பாட்டில்கள், 8 மதுப்பாட்டில்கள் இருந்துள்ளன. உடனே போலீஸார், இது தொடர்பாக அந்த காரை ஓட்டி வந்த சென்னை அபிராமபுரத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பவரை கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனர்.

சிறிது நேரத்தில் கார் ஓட்டுநர் செல்வகுமாரை நடிகை ரம்யாகிருஷ்ணனும் அவரது சகோதரி வினயாகிருஷ்ணனும் ஜாமீனில் அழைத்துச் சென்றனர்

கருத்துகள் இல்லை: