புதன், 17 ஜூன், 2020

தமிழ்நாடு அரசு பணிகளில் வட இந்தியர்கள் .. பெயர்களை பாருங்கள் .. தமிழக இளையோர் நடுத்தெருவில் ..?

தமிழகத்தில் பொறியாளர் பட்டம் பெற்று எத்தனையோ இளைஞர், இளைஞிகள் வேலை இல்லாமல் தவித்து வரும் வேளையில், தமிழக மாணவர்களுக்கு கிடைக்கக் கூடிய வேலை வாய்ப்புகளை தமிழர்களுக்கு வழங்காமல் வெளி மாநிலத்தவர்களுக்கு வழங்கியுள்ளது தமிழக அரசு..
சிங்கராயர் ஆரோக்கியசாமி  : இந்த பெயர்களை எல்லாம் படிங்க..!
இவர்கள் தான் இனி ந‌ம் பகுதிக‌ளின் T.N.E.B Department A.E-க்க‌ள்.
*1) Satya Kumar Behera*
*2) Pendyala Jothsna Praveena.P*
*3) Nimmala Meher Santhosh*
*4) Suparna .M.Das*
*5) Soni Kumari.S*


*6) Guru Prasad Reddy.V*
*7) Aswin Gupta*
*8) Rama Subba Reddy.Poli*
*9) Nukala Vijayabhaskar.N*
*10) Mangala Bhargava Kumar.M*
*11) Nageswara Rao.Gonna**
*12) Geddamyugandhar.G*
*13) Aklavya Kumar.Nill*
*14) Vamsi Krishna.Yele*
*15) Prudhvi Raj.Saibaba*


*16) Deepak Kumar.Nill*
*17) Anil Kumar.Polisetty*
*18) Raghava Rao.B*
*19) Venkata Ramaiah.Midde*
*20) Senapti Naga Venkata Sai Phanindra*
*21) Neelam SivaSankar Reddy*
*22) Naga Venkata Vamshi Kumar.V*
*23) Wien.R*
*24) Ashutosa Kumar Trapathi.N*
*25) Mangala Veera Sekhar*
*26) Shadab Usmani.S*
*27) Sai Krishna Chintha Ginjala*

29.05.2019 அன்று தமிழ்நாடு மின் வாரியத்தில் 325 நபர்களுக்கு உதவி மின் பொறியாளர் பதவிக்கு தமிழக முதல்வரால் பணி ஆணை ( முதல் கட்டமாக 5 நபர்களுக்கு) வழங்கப்பட்டது..!
இதில் ஆந்திரா, கேரளா, மகாராஷ்ட்ரா மாநிலத்தை சேர்ந்த 25 பேர் உட்பட 38 நபர்களும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளனர்..!
தமிழ்நாடு அரசு 2016-ல் செய்த திருத்தம் என்பது....

"தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு இந்தியா முழுவதும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்" என்பது தான்.
நேப்பாளம், பூட்டான் ஆகிய வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறுகிறது அந்த அரசாணை...
இவ்வாறு வருபவர்களுக்கு இப்பொழுது "தமிழ் தெரியாவிட்டாலும் பரவாயில்லை இரண்டாண்டுகளுக்குள் அவர்கள் தமிழ் கற்றுக்கொண்டால் போதும்" என்று சலுகை அளிக்கிறது த‌மிழ‌க‌ அர‌சு.
அதன் அடிப்படையில் தான் தமிழக மின் வாரியத்தில் 38 பேர் வெளிமாநிலத்தினர் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளனர்!.
தமிழகத்தில் பொறியாளர் பட்டம் பெற்று எத்தனையோ இளைஞர், இளைஞிகள் வேலை இல்லாமல் தவித்து வரும் வேளையில், தமிழக மாணவர்களுக்கு கிடைக்கக் கூடிய வேலை வாய்ப்புகளை தமிழர்களுக்கு வழங்காமல் வெளி மாநிலத்தவர்களுக்கு வழங்கியுள்ளது தமிழக அரசு..
இரயில்வேயில் நடந்த போது மெளனம் காத்தோம்...
இப்போது T.N.E.B-ல்...
நாளை தமிழக அரசின் அனைத்து துறைகளிலும்..!
 இனியும் மவுனம்தான் நமது மொழி என்றால் செத்துத் தொலையலாம்.
சிங்கராயர் ஆரோக்கியசாமி

கருத்துகள் இல்லை: