வெள்ளி, 21 அக்டோபர், 2016

சமூக வலைத்தளங்களில் கோலோச்சும் திமுக! தன்னார்வ பதிவாளர்களை அதிமுக போலீஸ் குறிவைப்பதான் உள்நோக்கம் இதுதான்

இந்தியாவில் உள்ள மற்ற கட்சிகளுக்கும் ---திமுகவிற்கும்
ஒரு அடிப்படை வேறுபாடு இருக்கிறது...
மற்றக்கட்சிகள் எல்லாமே பொதுவாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நடத்தப்படும் அரசியல் கட்சிகளாகும்....ஆனால்....ஆனால்....
திமுக மட்டும் தான்.... ஒரு இனவிடுதலை பேரியக்கமான அரசியல் கட்சி.
திமுக மட்டும் தான் ஈராயிரம் ஆண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்டு கிடந்த ஒரு இனத்தை தட்டி எழுப்பி...தன்மானம்...சமத்துவம்...சமநீதி...சம உரிமைகளை நிலைநாட்ட ...இயங்கிவரும்....ஒரு சமூக எழுச்சி இயக்கமாக,,...ஓர் அரசியல் கட்சியாகவும் உருமாறி வெற்றிநடை போட்டு வருகிறது...
திமுக ஒரு சமூக விடுதலைக்காக போராடும் கட்சி
மற்றவை சாதாரண அரசியல் காட்சிகள்...
ஆகவே தான்...திமுக மேல்நோக்கி எழ எழ எதிரிகளால் வீழ்த்தப்படுகிறது ...மறுபடியும்...

திமுக விழ விழ வீறு கொண்டு.. தீப்பிழம்பாய் எழுகிறது...
அதிகாரபலம் பணபலம் ஊடகபலம் என எல்லா பலங்களையும் ஏவி
திமுக என்னும் ஒடுக்கப்பட்டோர் இன எழுச்சியை ஆதிக்கவர்கம் அழிக்கப்பார்க்கிறது..
அதனால் தான் திமுக விற்கு இத்தனை சோதனைகள் தோல்விகள்... அல்ல சறுக்கல்கள்..........
திமுகவிற்கு என்றுமே தோல்வி கிடையாது...அது ஒரு தொடர் சமூக நீதி போராட்டம்...
போராளிகள் மாறலாம் மறையலாம் ...போராட்டம் முடியாது.
திமுக தரையில் அடித்த பந்து...விழ விழ துள்ளி எழும் எழும்..
பெரியார் அண்ணா கலைஞர் உதய சூரியன் சின்னம்.. இவர்களுக்கு...
எக்காலத்திலும் முடிவே இல்லை...
சூரியனைப்போல் என்றும் ஒளிரும் நித்தியர்கள்...உதாரணத்திற்கு இந்த பதிவு ஒரு தன்னார்வ எழுத்து ..முகநூல் பதிவு  

கருத்துகள் இல்லை: