
அவர் காணாமல் போனதற்கு முந்தைய தினம், கல்லூரி வளாகத்தில் சச்சரவு ஏற்பட்டிருக்கிறது. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜகதீஷ் குமார் உட்பட 12 அதிகாரிகளை மாணவர்கள் வளாகத்தை விட்டு வெளியேற விடவில்லை. மாணவர்களும், ஊடக நபர்களும் குறிப்பிடப்படும் அதிகாரிகளைச் சந்தித்து பேசியபடி இருக்கின்றனர். போலீஸாருக்கு இது குறித்து புகார் மனு அனுப்பப்பட்டிருக்கிறது என்றும் பல்கலைக்கழகம் விசாரணை நடத்தி, ‘குற்றவாளிகளுக்கு’ தண்டனை அளிக்கும் எனவும் தெரிவித்திருக்கின்றனர். மாணவர்கள் நடத்தும் போராட்டம் குறித்து பேசிய ஜகதீஷ் குமார், அவர்களுக்கு எதிரான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், மாணவர்களோடு சில கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது எனவும் தெரிவித்தார். இந்நிலையில், ‘ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலிருந்து காணாமல் போன மாணவரைக் கண்டுபிடிக்க சிறப்பு குழு அமைக்க வேண்டும்’ என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லி காவல்துறைக்கு அறிவுறுத்தியிருக்கிறார். மின்னம்பலம்.காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக