
டாக்டர் சிவகுமார் இதுதொடர்பாக, அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்களுடன் பேசியிருக்கிறார். அவர்கள் சில ஐடியாக்களை சொல்லியிருக்கிறார்கள். பிறகு, போயஸ் கார்டனுக்குப் போன டாக்டர் சிவகுமார் அங்கே ஜெயலலிதா தங்கும் முதல் தளத்தில் சில மாற்றங்களைச் செய்ய ஆரம்பித்திருக்கிறார். போயஸ் கார்டனில் தரைத்தளத்திலிருந்து முதல் தளத்துக்குச் செல்ல லிஃப்ட் வசதி உண்டு. ஆனால் அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து முதல்வரை ஸ்ட்ரெச்சரில் வீட்டுக்கு கொண்டுவந்தால் முதல் தளத்துக்குச் செல்லுமளவுக்கு அது பெரிய லிஃப்ட் கிடையாது. அதனால் ஸ்ட்ரெச்சர் ஏற்றுமளவுக்கு போயஸ் கார்டனில் உள்ள லிஃப்ட்டை மாற்றியமைக்கும் பணிகள் விறுவிறுவென தொடங்கிவிட்டது. இந்தப் பணிகளை சசிகலாவும் நேற்று இரவு போயஸ் கார்டன் சென்று நேரில் பார்த்துவிட்டு வந்திருக்கிறார். கேரளாவில் உள்ள ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடர்கள் சிலரிடம் ஆலோசனையும் கேட்கப்பட்டிருக்கிறது. அவர்கள் சொன்ன ஐடியா படி, வரும் 27ஆம் தேதி ஜெயலலிதாவை அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்து போயஸ் கார்டனுக்கு மாற்றுவது திட்டமாம்’’ என்ற ஸ்டேட்டஸ்க்கு போஸ்ட் கொடுத்தது. அதைப் படித்து ஷாக் ஆன வாட்ஸ் அப், ‘இதெல்லாம் சாத்தியமா?’ என்ற கேள்வியை கமெண்ட்டில் போட்டது. பதிலை ரிப்ளைஸில் போட்டது ஃபேஸ்புக்.
மின்னம்பலம்.காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக