புதன், 18 மே, 2016

ப்ளஸ் 2வில் 71% மார்க் எடுத்த கோவை மாணவர் ஃபெயில் பயத்தில் ரிசல்டுக்கு முன்பு தற்கொலை

கோவையில் ப்ளஸ் 2 தேர்வில் 71 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ள மாணவர் ஒருவர் முடிவு வெளியாகும் முன்பே தோல்வி பயத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியானது. இதில் கிருஷ்ணகிரி மாட்டம் ஊத்தங்கரையில் உள்ள ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியை சேர்ந்த ஆர்த்தி, ஜஸ்வந்த் ஆகியோர் 1,200க்கு 1,195 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளனர். Class-12 Student Hangs Self Fearing Failure In Exams கோவை மாவட்டம் பெரிநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சக்திகணேஷ்(17). காரமடையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்த அவர் ப்ளஸ் 2 தேர்வு எழுதியிருந்தார்.
கல்வி வியாபாரிகள் பரீட்சை தேர்வு சாதனைகளை மீடியாக்களில் ஹைலைட் பண்ணுவது பணம் பண்ணத்தான்.. இந்த வியாபாரிகளின் கூட்டு கொள்ளைக்காக அப்பாவி மாணவர்கள் பலியாவது வேதனை.  பரீட்சையில்  தோத்தா ஒண்னும்  குடி முழ்கி போய்விடாது... அட நீங்க ஒன்னு நான் எந்த  பரீட்சையிலும்   இதுவரை பாஸ் பண்ணலையே ... நல்லாத்தான் அதுவும் வித்தியாசமாகத்தான் இருக்கிறேன். படிச்ச பெரியவங்க ஒன்னும் பெரிசா கிளிசுடல  ....
இந்நிலையில் அவருக்கு தான் தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற பயம் ஏற்பட்டது. Post Comment இதையடுத்து அவர் தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பு நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் ப்ளஸ் 2 தேர்வில் 71 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முடிவுகள் வரும் முன்பு அவர் அவசரப்பட்டு உயிரை மாய்த்துக் கொண்டது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Read more at: /tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: