ஒவ்வொரு தொகுதிக்கும் உட்பட்ட நகரங்களை, ஒன்றியங்களை கவனத்தில்கொண்டதுடன், அந்த தொகுதியில் உள்ள பெரும்பான்மையான சமூகம், வெற்றி-தோல்விகளைத் தீர்மானிக்கும் சமூகம், வேட்பாளர்களின் பலம்-பலவீனம், அரசியல் கட்சிகளின் வாக்குவங்கி, அனைத்துக் கட்சிகளின் பிரச்சார அணுகுமுறை உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டன."
திருவெறும்பூர் தொகுதியில் 16 சதவிகித வாக்குகளைப் பெறும் தே.மு.தி.க. அங்கே தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வை சம பலத்தில் மோத விட்டிருக்கிறது.
குமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதியில் பா.ஜ.க. அதிக வாக்குகளைப் பிரித்து, தேர்தல் முடிவுகளையே மாற்றுகிறது. அதே மாவட்ட குளச்சல் தொகுதியில் ம.தி.மு.க. அதிக வாக்கு களைப் பெற்று தொகுதி முடிவை இழுபறி ஆக்குகிறது.
மழை வெள்ளம் பாதிக்காத சேலம் மாவட்ட பகுதிகளில் தொடங்கும் அ.தி.மு.க. வாக்குபலம் கோவை, திருப்பூர் என தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் அதிகமாக காணப்படுகிறது. அதுபோல தேனி மாவட்டத்தில் அ.தி.மு.க. வலுவாக உள்ளது. மேற்கு மாவட்டங்கள் மற்றும் தேனி மண்டலங்களில் பின்வாங்கும் தி.மு.க., காவிரி டெல்டாவான தஞ்சை மண்டலத்தில் அ.தி. மு.க.வுடனும் இடதுசாரி கட்சிகளுடனும் வலுவாக மோதுகிறது. வட மாவட் டங்களில் அ.தி.மு.க.வையும் பா.ம.க.வையும் சரி சமமாக சந்தித்து தி.மு.க. இயல்பாகவே முன்னிலை பெறுகிறது.
;தமிழகம் முழுவதும் அனைத்துக் கட்சிகளோடும் சரிசமமாக மோதி, முன்னிலை பெறும் தி.மு.க.வின் ஓட்டம் ஆட்சி மாற்றம் வேண்டும் என்கிற மக்களின் மனநிலையைத் தெளிவாகவே பிரதிபலிக்கிறது.
;ஜெயங்கொண்டம் தொகுதியில் பா.ம.க.வின் குரு, தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் காங்கிரசையும் மக்கள்நலக் கூட்டணியில் போட்டியிடும் ம.தி.மு.க.வையும் பின்தள்ளிவிட்டு முன்னிலை பெறுகிறார். தர்மபுரி தொகுதியில் பா.ம.க., அ.தி.மு.க.வை பின்தள்ளி இரண்டாவது இடத்தைப் பெறுகிறது. பென்னாகரம், சேலம் மேற்கு, மேட்டூர், ஓமலூர், ஆற்காடு ஆகிய தொகுதிகளில் கணிசமான செல்வாக்குடன் பா.ம.க. இருப்பதால் முடிவுகளில் மாற்றம் தெரிகிறது
;திருப்போரூர், செஞ்சி, மதுரை தெற்கு, அரவக்குறிச்சி, கிணத்துக் கடவு, பொள்ளாச்சி, பல்லடம், பாளையங் கோட்டை, குளச்சல், சங்கரன்கோயில் தொகுதி களில் ம.தி.மு.க. தனது பலத்தை வெளிக்காட்டு கிறது. கம்யூனிஸ்ட் கட்சி கள், கலைஞர் போட்டி யிடும் திருவாரூர், விக்கிர வாண்டி, வாசுதேவநல்லூர், திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு, திண்டுக்கல், வால் பாறை, நன்னிலம், விளவங்கோடு, பவானிசாகர், பெரியகுளம் ஆகிய தொகுதிகளில் வாக்கு வங்கியுடன் உள்ளன. நாம் தமிழர் கட்சி பெரிய அளவில் வாக்குபலம் பெறாவிட்டாலும் தமிழகம் முழுவதும் வாக்காளர்களின் கவனத்தை ஈர்த் திருக்கிறது.
;சாதி, மத கண்ணோட்டங்கள் பல தொகுதி களில் கட்சி அரசியலைத் தாண்டி முன் நிற்கின்றன. புதிய வாக்காளர்களில் ஒரு தரப்பினர் தி.மு.க.வை ஆதரிக்கின்றனர். இந்த ஆதரவு அ.தி.மு.க.வுக்கு இல்லை. பெண்களிடம் அ.தி.மு.க. அதிக செல்வாக்குடன் திகழ்கிறது. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ள செல் போன், ஸ்கூட்டி மானி யம் இவர் களைக் கவர் கிறது. தி.மு.க.வில் தேர்தல் அறிக்கை இளைஞர்கள், விவசாயிகள், வணிகர்கள் உள்ளிட்டோரையும் நடுத்தர வர்க்கத்தினரையும் கவர்கிறது. ஆளுங்கட்சி வேட்பாளர்களுக்கு எதிரான கோபம் பல தொகுதிகளில் வெளிப் பட்டாலும் கட்சி வாக்கு கள் சிதறவில்லை. இழுபறி தொகுதிகளிலும் முதலிரண்டு கட்சிகளுக்கு 2% வித்தியாசம் மட்டுமே உள்ள தொகுதிகளிலும், கடைசி நேரப் பணிகளைப் பொறுத்து முடிவுகள் மாறலாம்.;
;வேட்பாளர்களின் தேர்வு, சாதி ஆகியவை அதிக முக்கியத்துவம் பெறும் இந்தத் தேர்தலில் ஆளும்கட்சியின் பண விநியோகம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏழை மக்கள் மத்தியில் "அ.தி.மு.க. ஓட்டுக்குப் பணம் கொடுக்கப் போகிறது' என்கிற எதிர்பார்ப்பு நிலவுவதைக் களத்தில் காண முடிந்தது. பண விநியோகம் பரவலாக நடைபெற்றால், கருத்துக் கணிப்பில் வெளிப்படும் முடிவுகள் மாறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. பணப் பாய்ச்சலுக்கு முன்பாக நக்கீரன் சர்வே படை மேற்கொண்ட கருத்துக்கணிப்பின்படி முன்நிலை நிலவரம்.<>-ஆசிரியர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக