வியாழன், 28 ஏப்ரல், 2016

மருத்துவ நுழைவு தேர்வு...கலைஞர் உச்சநீதிமன்றத்துக்கு கோரிக்கை :தமிழகத்திற்கு விலக்கு அளிக்கவும்.

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., எம்.டி. போன்ற மருத்துவக் கல்வி நிறுவனங்களில் நுழைவுத் தேர்வுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ள சுப்ரீம் கோர்ட், இந்த ஆண்டே நுழைவுத் தேர்வை நடத்த வேண்டுமென்றும் கட்டளை பிறப்பித்திருக்கிறது.தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தி.மு.க. ஆட்சிக் காலத்திலேயே நுழைவுத் தேர்வை ரத்து செய்து சட்டம் இயற்றப்பட்டு, அதனை ஒட்டி கடந்த பல ஆண்டுகளாகவே நுழைவுத் தேர்வு இல்லாமலேயே பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்டு நடைமுறைக்கு வந்த இந்தச் சட்டத்தின் காரணமாக கிராமப்புற மாணவ மாணவியரும், பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவ மாணவியரும் பெரும் அளவுக்குப் பலன் அடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு தமிழக மாணவ மாணவியரிடையே அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. எனவே தமிழகத்தைப் பொறுத்த வரையிலாவது நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும்படி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் உடனடியாகப் பதில் மனு ஒன்றைத் தாக்கல் செய்து அனுமதி பெற்றுத் தருவதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழக அரசும் மத்திய அரசு அவசர நடவடிக்கை எடுப்பதற்குத் தேவையான அழுத்தம் தரவேண்டுமென்ற நோக்கில், மத்திய அரசுடன் நேரில் விவாதித்து தமிழக நிலைமைகளைத் தெளிவுபடுத்த அனுப்பிவைக்க வேண்டும் எனக்கூறியுள்ளார். தினமலர்.கம

கருத்துகள் இல்லை: