செவ்வாய், 26 ஏப்ரல், 2016

வைகோ ஏன் பம்முகிறார்? கோஷம் போட்டது கருணாஸ் உட்பட்ட அதிமுக ஆதரவு தேவர் அமைப்புக்கள்..வைகோவோ திமுகவை வம்புக்கு...

வைகோவை எதிர்த்து போராட்டம் நடத்தி, அவரை போட்டியிடுவதிலிருந்து பின் வாங்கச் செய்த 5 அமைப்புகள்:
1. மாமன்னர் புலித்தேவர் மக்கள் இயக்கம்
2. முக்குலத்தோர் புலிப்படை
3. அகில இந்திய தேவர் இன கூட்டமைப்பு
4. பார்வர்டு பிளாக்
5. தேவர் குல கூட்டமைப்பு

இந்த அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் வைகோவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி, கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தினர். இதில் 50 பேரை போலீஸ் கைது செய்துள்ளது. இதில் சில அமைப்புகள் அதிமுக கூட்டணியில் இருப்பவை; இன்னும் சில, அதிமுக கூட்டணியில் வாய்ப்பு கிடைக்காததால் வெளியில் நிற்பவை.
இந்த அமைப்புகள் இரண்டு மூன்று நாளாக தீவிர தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களுக்கும் மதிமுக தொண்டர்களுக்கும் இடையில் மோதல் சூழ்நிலை உருவாகிவிட்டது. இதனால்தான் வைகோவுக்கு தோல்வி பயம் ஏற்பட்டு, தேர்தலில் போட்டியிடாமல் பின் வாங்கியுள்ளார்.
ஆனால் வைகோ இந்த அமைப்புகளையோ, அவற்றைச் சேர்ந்தவர்களையோ கண்டித்து ஒரு வார்த்தையும் பேசவில்லை என்பதை அனைவரும் கவனிக்க வேண்டும். சம்பந்தமே இல்லாத திமுக மேல் பழி போட்டு ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த அறிக்கையை படித்தார்.
இது நாடகமா? இல்லை வைகோவின் திட்டமிட்ட சதி அரசியலா? // by R.M.Paulraj facebook

கருத்துகள் இல்லை: