இதுகுறித்து பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக தமிழகம் முழுவதும் ரூ.1000 கோடி அளவுக்கு பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அதிமுக பிரமுகர்கள் வீடுகளில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள பணம் எள்ளளவுதான்.
பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், 2 நாட்கள் முன்பு இதேபோன்ற பண பதுக்கல் குற்றச்சாட்டை சுமத்தியிருந்தார். அதிமுகவினரிடம் மட்டுமல்லாது, காங்கிரஸ் கட்சியினரிடமும் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களிடமும் சோதனை நடத்த வேண்டும் என்றும் தமிழிசை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.தமிழ்.ஒனிந்திய.கம
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக