செவ்வாய், 26 ஏப்ரல், 2016

JNU நிர்வாகம் கன்னையா குமாருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம், மேலும் ஐவருக்கும்...

The Jawaharlal Nehru University (JNU) administration on Monday announced rustication of Umar Khalid and Anirban Bhhatacharya in connection with an event organised in the campus to mark the death anniversary of Afzal Guru. While Umar has been rusticated for one semester and a fine of Rs. 20,000 imposed on him Anirban has been declared out of bounds from the campus for five years after July 23, 2016. He has been rusticated till the period of July 15.
புதுடில்லி;டில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலை வளாகத்தில், தேச விரோத கோஷம் எழுப்பிய புகார் தொடர்பாக, மாணவர் சங்க தலைவர் கன்னையா குமாருக்கு, பல்கலை நிர்வாகம், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது. டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர் சங்க தலைவர் கன்னையா குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள், பயங்கரவாதி அப்சல் குருவுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதாக கைது செய்யப்பட்டனர்; பின், ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
அவர்கள் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க, பல்கலை நிர்வாகம், கமிட்டி ஒன்றை நியமித்தது. அந்த கமிட்டி அளித்த பரிந்துரையின் அடிப்படையில், பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, கன்னையா குமாருக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. மற்றொரு மாணவரான உமர் காலித்துக்கு, 20 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன், ஒரு செமஸ்டர் முழுவதும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.கன்னையா குமாருடன் கைதான அனிர்பன் பட்டாச்சார்யா, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு எந்த ஒரு வகுப்பிலும் சேர்ந்து படிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரில், மேலும் இரு மாணவர்கள், இரண்டு செமஸ்டர்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: