சனி, 5 டிசம்பர், 2015

சென்னை மக்களுக்கு அமெரிக்க அரசு எந்த உதவியும் செய்ய தயார்...இந்திய அரசு இதுவரை உதவி கேட்கவில்லை ....

சென்னை மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அமெரிக்கா அரசு எந்த நேரத்திலும் தயாராக இருக்கிறது என்றும் இதுவரை எங்களிடமிருந்து எந்த உதவியையும் இந்திய அரசு கேட்கவில்லை  என்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை துணை செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர் தெரிவித்திள்ளார்.
இது குறித்து  வாஷிங்டன்னில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்திருப்பதாவது: வரலாறு காணாத கனமழை வெள்ளத்தால் தமிழகத்தின் சென்னை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அமெரிக்கா அரசு தயாராக இருக்கிறது.


பல ஆண்டுகளில் இல்லாத, மிகவும் மோசமான வெள்ளத்தில் சிக்கியுள்ளது சென்னை. இந்த வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இன்னும் சிக்கித்தவிக்கும் மக்கள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்துவாடும் மக்களைச் சுற்றி தற்போது எங்களது எண்ணங்கள் சூழ்ந்துள்ளன.
இந்த இக்கட்டான வேளையில் உதவுவதற்காக இந்திய அரசுடன் அமெரிக்க அரசு தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு எல்லாவித உதவியையும் செய்ய அமெரிக்கா தயார்நிலையில் இருப்பதாக நாங்கள் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறோம்.
இதுவரை எங்களிடமிருந்து எந்த உதவியையும் இந்திய அரசு கேட்கவில்லை. இதுபோன்ற வேளைகளில் அவசர உதவி மற்றும் பொதுச்சேவை நிலவரங்களை சுயமாக கையாளக்கூடிய அளவுக்கு இந்திய அரசு மிகவும் மேம்பாடு எய்தியுள்ளது. சிக்கலான இத்தருணத்தில் எந்த மாதிரியான உதவிகளை அமெரிக்கா செய்ய வேண்டும் என இந்திய அரசிடம் கேட்டுள்ளோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள அமெரிக்க தூதரகம் உள்ளது. வெள்ள பாதிப்பால் அந்த அலுவலகம் தொடர்ந்து மூடப்பட்டுள்ளது. இந்நிலையலி் சென்னை வாழ் அமெரிக்கர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அமெரிக்க அரசு  அறிவுறுத்தப்பட்டுள்ளது  webduniya.com

கருத்துகள் இல்லை: