திங்கள், 30 நவம்பர், 2015

ராகுல் இரட்டை குடியுரிமை விவகாரம் : சுப்பிரமணிய சாமி மனு தள்ளுபடி..

 ராகுல் காந்தியின் குடியுரிமை விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என கூறி உச்ச நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி, லண்டனில் இயங்கி வரும் பேக் காப்ஸ் என்ற கம்பெனி வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி பிரிட்டன் குடிமகன் என்று தன்னை குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறி ஆவணங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த இரட்டை குடியுரிமை விவகாரத்தில் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல். சர்மா என்பவர் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.nakkheeran,in    சு.சுவாமி  பேசாம கனிமொழிக்கு அல்லது வேற திமுககாரனுக்கு எதிரா ஏதாவது மனு கொடுங்க உடன நடவடிக்கை எடுப்பாய்ங்க....

கருத்துகள் இல்லை: