செவ்வாய், 1 டிசம்பர், 2015

சிறப்பு பூஜை: ஸ்டாலின் ஏற்பாடு!

தொடர் சுற்றுப்பயணம், பொதுக்கூட்டம், வெள்ள நிவாரணப் பணி என சுற்றித் திரிந்ததால், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினுக்கு உடல் சோர்வு ஏற்பட்டுள்ளது. புத்துணர்ச்சி பெற மூலிகை சிகிச்சைக்காக, அவர் கேரளா சென்றுள்ளார்.தமிழகம் - கேரளா எல்லையில், களியக்காவிளைக்கு அருகில் உள்ளது பூவார்; இங்குள்ள பிரபல மூலிகை சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெறும் திட்டத்துடன், ஸ்டாலின், கேரளா சென்றுள்ளார். அங்கு, எட்டு நாட்கள் தங்கி, மூலிகை குளியல் உள்ளிட்ட, ஆயுர்வேத சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள உள்ளார். பின் அவர், திருவனந்தபுரம் அருகில் உள்ள, கரிக்காகோம் என்ற ஊருக்கு செல்கிறார். அங்குள்ள, சாமுண்டீஸ்வரி கோவிலில், ரத்த சாமுண்டிக்கு, சிறப்பு பூஜை செய்கிறார்; அங்கு, சத்ரு சம்ஹார யாகத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிரிகளிடமிருந்து காப்பதற்காக, இந்த பூஜை நடத்தப்படுகிறது. இதில், ஸ்டாலின், மனைவி துர்காவுடன் கலந்து கொள்கிறார் என, அவர் ஆதரவாளர்கள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.- நமது நிருபர் - தினமலர்.com

கருத்துகள் இல்லை: