செவ்வாய், 1 டிசம்பர், 2015

தமிழகத்தில் சராசரிக்கு 50 சதவீத அதிக மழை

தமிழகத்தில் இன்று வரை பெய்துள்ள மழை சராசரியை காட்டிலும் 50
சதவிதம் அதிகமாக உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தொடர்ந்து இன்று செவ்வாய்க்கிழமை முதல் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் கன மற்றும் மிக கனமழை பெய்யுமென்றும் சென்னை வானில மைய இயக்குனர் ரமணன் குறிப்பிட்டார். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை மீண்டும் கனமழை பெய்ய துவங்கியுள்ள சூழலில், வெள்ளப் பாதிப்புகளிலிருந்து ஏற்கனவே சிக்கித்தவித்த பொது மக்கள், மீண்டும் புதிய பிரச்சனைகளில் சந்திக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளில் வெள்ள எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. bbc.tamil.com

கருத்துகள் இல்லை: