செவ்வாய், 1 டிசம்பர், 2015

தள்ளாடுது தமிழகம் ஊத்தி கொடுத்த வானம் ...தூத்துக்குடியின் அவலம்

tuticorin-flood-11மழை வெள்ளத்தில் தூத்துக்குடி – மயக்கத்தில் மாநகராட்சி!;வினவு
 மேற்கு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் தூத்துக்குடி மூழ்கியது. இக்காட்டாறு புதுக்கோட்டை ஓடையில் பாய்ந்து கோரம்பள்ளம் கண்மாயில் கலந்து உப்பாற்று ஓடை வழியாக வங்கக் கடலுக்கு செல்லும். ஆனால் இந்த ஓடை ஆக்கிரமிக்கப்பட்டதால் உடைப்பெடுத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மூழ்கடித்தபடி, தூத்துக்குடி திருநெல்வேலி நெடுஞ்சாலையை துண்டித்துக்கொண்டு குடியிருப்பு பகுதிகளை கபளீகரம் செய்தது.
கோரம் பள்ளம் கண்மாயின் கரைகளை பலப்படுத்த தவறியதால் அதில் உடைப்பு ஏற்பட்டது. அதேபோல் உப்பாற்று ஓடையும் ஆக்கிரமிக்கப் பட்டதால் அதிலும் உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையை துண்டித்துக்கொண்டு முத்தையாபுரத்தை சுற்றியுள்ள பகுதிகளை கபளீகரம் செய்தது.

ஆங்கிலேயரான பக்கிள் துரையால் 100 அடி அகலத்தில் உருவாக்கப் பட்டிருந்த பக்கிள் ஓடை வெறும் 20 அடி அகலம் கொண்ட கால்வாயாக மாற்றும் பணி கடந்த தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டு அ.திமு.க. ஆட்சியில் முழுமையாக முடிக்கப்பட்டது. குறுகிய இக்கால்வாயில் காட்டாற்று வெள்ளம் செல்ல முடியாமல் சுற்றிலும் பாய்ந்தது. மற்றொரு பகுதியான சிப்காட் வளாகத்தின் வழியாகவும் வெள்ள நீர் ஊருக்குள் பாய்ந்தது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
அக்கரைக்கண்மாய் இருந்த இடம்தான் இன்று முத்தம்மாள் காலனி மற்றும் மச்சாது நகராக உள்ளது. தி.மு.க. வின் ரியல் எஸ்டேட் மாபியாக்களால் வளைக்கப்பட்டு பிளாட் போட்டு விற்கப்பட்ட இக்குளம்தான் இன்று தன்னை வெளிக்காட்டி உள்ளது. இங்குள்ள மக்கள் கழுத்தளவு வந்த வெள்ளத்தால் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதற்க்கு டெம்போ, மிதவைப்படகு, பைபர் படகு, டிராக்டர் என்று தனி நபர்கள், கட்சியினர், நிறுவனங்களின் உதவி கிடைத்தது. நம் மக்கள் உரிமை பாதுகாப்பு மைய தோழர்கள் வாகனத்தை ஓட்டியும், உடனிருந்து வழிகாட்டியும் மீட்பு வேலையில் பங்கெடுத்தனர். அரசு நிர்வாகமோ செயலற்று ஸ்தம்பித்துக் கிடந்தது.
இந்கிருந்து வெள்ளத்தை வடிக்க இருந்த வடிகால்கள் தேசிய நெடுஞ்சாலையில் மட்டும் சிறுபாலங்களாக வெளிப்படுத்திக் கொண்டுள்ளது. சாலையின் இருபுறமும் வடிகால் வாய்க்காலுக்கான அறிகுறியே இல்லாமல் காம்ப்ளக்ஸ்களாக நிற்கிறது. இத்தகைய தூர்ந்து போன வடிகாலுக்கான ஆதாரங்களை தூத்துக்குடியின் உட்புற சாலைகளிலும் பார்க்க முடிகிறது. இந்த வடிகால்களை மீட்டெடுக்க மாநகராட்சி நிர்வாகம் எந்த முயற்சியையும் செய்யவில்லை. அதற்கு பதில் சாலைகளை வெட்டி குழாய் அமைத்தும், மோட்டார்களை வைத்து பம்ப் செய்தும், அடுத்தடுத்துள்ள தெருக்களை வரிசையாக மூழ்கடித்து வருகிறது. இதனால் கீழ்ப்புறமுள்ள மக்கள் எதிர்த்து போராட, மாநராட்சியோ ஒருதெருவுக்கும் மற்றொரு தெருவுக்கும் மோதலை ஏற்படுத்தும் விதமாக ஜே.சி.பி.-ஐ மக்களிடம் தந்துவிட்டு ஒதுங்கி நிற்கிறது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
தன்னெழுச்சியாக நகரின் பல பகுதிகளிலும் சாலை மறியல்கள் தொடர்ந்து நடக்கிறது. உருப்படியாக எதையும் செய்யாமல் வெட்டியாக சுற்றிவந்து போட்டோவுக்கு போஸ் தந்த மாநகராட்சி ஆணையர், மேயர் அந்தோனி கிரேஸ், மாவட்ட ஆட்சியாளர் ரவிக்குமார், அமைச்சர் சண்முகநாதன் உள்ளிட்டவர்கள் மக்களின் கடும் வெறுப்புக்கு உள்ளாகினர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
புறநகரான முத்தையாபுரம் பகுதியில் வீடுகள் கடும் சேதமடைந்தது. குறிப்பாக கக்கன் நகரில் மட்டும் 47 வீடுகள் முழுமையாக இடிந்தது. வீடுகளை இழந்தவர்களும், வெள்ளம் வடியாத நிலையில் வீட்டை விட்டு வெளியேறியவர்களும் அருகிலுள்ள சர்ச், பள்ளி, திருமண மண்டபங்களிலும் தஞ்சமடைந்துள்ளனர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
tuticorin-flood-13பாதிப்புக்குள்ளான பகுதிகளை பார்வையிட்டு, போராட்டத்தில் உள்ள மக்களுக்கு துணையாக நின்று, மீட்பு வேலைகளிலும் ஈடுபடுகின்றனர் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தினர். போராட்டத்தை எந்த திசையில் நடத்தவேண்டும் என்று குறிப்பாக வெள்ளம் நின்று பலநாள் கடந்தும் வெள்ளக்காடான நகரை மீட்காமல் தோற்றுவிட்ட அரசுக்கு எதிராக அணிதிரட்டி வருகின்றனர்.
தகவல்,
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்,
தூத்துக்குடி

கருத்துகள் இல்லை: