செவ்வாய், 1 டிசம்பர், 2015

வீணான மழை நீர் கணக்கிடுவதில் சிக்கல்

வடகிழக்கு பருவமழையின் போது, வீணாக கடலில் கலந்த வெள்ள நீரை கணக்கிடுவதில், பொதுப்பணித் துறைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அக்டோபர் இறுதியில் துவங்கிய வடகிழக்கு பருவமழை, தொடர்ந்து பெய்து வருகிறது. மாநிலம் முழுவதும் சராசரியாக, 50 செ.மீ., மழை பெய்துள்ளது. இது, இயல்பு அளவை விட அதிகம். தமிழகத்தில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார் உள்ளிட்ட, 10 மாவட்டங்களில், சராசரி அளவை விட கூடுதலாக மழை பெய்துள்ளது. பல ஆண்டுகளாக
வறண்டு கிடந்த ஆறுகளில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்நிலைகள் நிரம்பி, உபரி நீரை வெளியேற்றும் நிலை உருவாகி உள்ளது. அதே சமயம், வீணாக கடலில் கலந்த மழைநீரின் அளவை, துல்லியமாக கண்டறிய முடியவில்லை. நீர்நிலைகளில் தேங்கியதை விட, சாலைகளில் அதிகளவு மழைநீர் தேங்கியதே இதற்கு காரணம் .மழை நீரை சேமிக்க தடுப்பணைகள் கூட கிடையாது... பிறகு எப்படி வீணானது என்று சொல்ல முடியும்... அப்படிப்பார்த்தால் நீர் கடலுக்குத்தான் செல்கிறது...
>இதுகுறித்து, பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மழை அளவு, நீர் ஆவியாதல், வெப்பநிலை, காற்றின் வேகம், ஈரப்பதம் போன்றவற்றை கண்டறிய, ஆற்றுப்
படுகைகளில், 45 இடங்களில், பொதுப்பணித்துறையின் வானிலை நிலையங்கள் உள்ளன. குறுகிய காலத்தில், அதிகளவு மழை பெய்துள்ளது. நீர்நிலைகள் நிரம்புவதற்குள், சாலைகளில் அதிகளவு வெள்ள நீர் ஓடியது. கடலோர மாவட்டங்களில், இதுபோன்ற வெள்ளம் அதிகளவு இருந்தது. வழக்கமாக, கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் கிடைக்கும் மழைநீர் உடனடியாக கடலை சென்று சேர்ந்துவிடும். அணைகள், நீர்த்தேக்கங்கள், ஏரிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் அளவை வைத்தே வீணான நீரின் அளவை கண்டுபிடிக்க முடியும். வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கும் தகவலை வைத்தே, வீணான வெள்ளநீரை கணக்கிட இயலும்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர்- -தினமலர்.com

கருத்துகள் இல்லை: