வெள்ளி, 2 அக்டோபர், 2015

100 கோடி சிக்கியது! விஜய்,நயன், சமந்தா...400 அதிகாரிகள் அன்புச்செழியன்,சந்திரசேகர்,சிம்புதேவன் .....

நடிகர் விஜய், தயாரிப்பாளர்கள் பி.டி.செல்வகுமார், சிபுதமீன்ஸ், இயக்குனர் சிம்புதேவன், அன்பு செழியன், விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திர சேகர், கலைப்புலி தாணு மற்றும் புலி படத்துடன் நேரடி தொடர்புடையவர்கள் வீடுகள் அலுவலங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேந்று முன்தினம் திடீர் சோதனை நடத்தினார்கள். நடிகைகள் நயன்தாரா, சமந்தா வீடுகளிலும் அதிரடி சோதனை நடந்தது. நேற்றும் 2–வது நாளாக சோதனை நடத்தப்பட்டது. பல்வேறு புகார்களின் அடிப்படையில் சென்னை, மதுரை, கன்னியாகுமரி, திருவனந்தபுரம், கொச்சி, ஐதராபாத் ஆகிய ஊர்களில் 10 பேருக்கு சொந்தமான 35 இடங்களில் இந்த சோதனை நடந்தது. 400 அதிகாரிகள் தில் பங்கேற்றனர். இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ரொக்க பணம், நகைகள், ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன. புலி படத்துக்கு வரிவிலக்குகிடையாது !அரசுஅறிவிப்பு .
இந்த அதிரடி சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சோதனையின் போது ஒருவரின் வீடுகளில் இருந்து கணக்கில் வராத ரூ. 2 கோடி ரொக்க பணம் சிக்கியது. ரூ. 2 கோடி தங்கம், வைர நகைகளும் கிடைத்தன. இவை கணக்கில் காட்டப்படாதவை என்பது கண்டறியப்பட்டது. இவற்றை வருமானவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.மாலைமலர்.com

கருத்துகள் இல்லை: