வெள்ளி, 30 மே, 2014

Delhi திடீரென தாக்கிய புயல் மழையால் இருளில் மூழ்கிய டில்லி விமானங்கள் திசை திருப்பிவிடப்பட்டன

கடும் வெயில் அடித்துவந்த தில்லியில் இன்று மாலை 5 மணிக்குகு திடீரென
புயல் காற்று வீசியது. மேலும் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததால் நகரின் பலஇடங்களில் மின் கம்பங்கள் சரிந்து மின்தடை ஏற்பட்டது. மேலும் மரங்கள் பல இடங்களில் சரிந்து விழுந்தது. தில்லி மட்டுமல்லாமல்  அருகே உள்ள நொய்டா, துவாரகா உள்ளிட்ட நகரங்களிலும் புயல் மழை பெய்தது.
இதனால் அங்குள்ள மெட்ரோ ரயில் நிலையம் மூடப்பட்டன. திடீர் புயல் மழையால் தில்லிக்கு வந்து கொண்டிருந்த 11விமானங்கள் திருப்பிவிடப்பட்டன. இந்த புயல் மழையால் தில்லியின் பலபகுதிகள் இருளில் மூழ்கின. நேற்று  43.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை காணப்பட்டது.. இதுவே தில்லியில் அடித்த உச்சபட்ச வெயில்  ஆகும்.dinamani.com

கருத்துகள் இல்லை: