வெள்ளி, 30 மே, 2014

ராகுல் ஒரு கோமாளி என கூறிய கேரள காங்கிரஸ் தலைவர் சஸ்பெண்ட்!

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் ஒரு கோமாளி என கூறிய கேரள காங்கிரஸ் தலைவர் முஸ்தபா, கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ;லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த முஸ்தபா, ராகுல் ஒரு கோமாளி என்றும், அவரை துணைத்தலைவர் பதவியிலிருந்து நீக்கி விட்டு, அவருக்கு பதிலாக பிரியங்காவை தலைவராக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அவரது கருத்து காங்கிரஸ் கட்சியில் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்த நிலையில், வியாழக்கிழமை மாலை முஸ்தபா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். nakkheeran .in

கருத்துகள் இல்லை: