செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

முறிகண்டி பிரதேசத்தைச் சேர்ந்த இந்துபுரம் சாந்தபுரம் கிராமங்களின் சில பகுதிகளில் மீள்குடியேற அனுமதி!

முறிகண்டி பிரதேசத்தில் உள்ள இந்துபுரம் மற்றும் சாந்தபுரம் கிராமங்களின் சில பகுதிகளில் மக்கள் மீளக்குடியமர்வதற்கு பாதுகாப்புத் தரப்பினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

ஏ9 வீதியின் 246 ஆவது கிலோ மீற்றர் கல்லில் இருந்து 247 ஆவது கிலோ மீற்றர் கல் வரையிலான ஒரு கிலோ மீற்றர் பகுதியிலேயே இந்த மீள்குடியேற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதியின் மூலம் இந்த இரண்டு கிராமங்களையும் சேர்ந்த சுமார் 350 குடும்பங்கள் தமது சொந்தக் காணிகளுக்குத் திரும்பிச் செல்வதற்குச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: