வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

கே.பியே பொறுப்பு! யுத்தத்தால் கொல்லப்பட்டவர்களின் உயிர்களுக்கு

யுத்தத்தால் கொல்லப்பட்டவர்களின் உயிர்களுக்கு கே.பியே பொறுப்பு!
12.08.10
இலங்கையில் இதுவரைக்காலமும் தலை விரித்தாடிய பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை ஒழித்த யுத்தம் என்பவற்றினால் இரு தரப்பிலும் கொல்லப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களுக்கும் கே.பியே பொறுப்பு கூறவேண்டும் என ஜனநாயக தேசிய முன்னணி குறிப்பிட்டுள்ளது.
ஆயுதம், நிதி மற்றும் சர்வதேச சமூகத்தினரை ஒன்றிணைத்து விடுதலைப் புலிகளைச் சக்திமிக்க அமைப்பாக மாற்றிய பெருமை கே.பியையே சேரும் என ஜனநாயக தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸநாயக்க நேற்று இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது குறிப்பிட்டார்.
இலங்கையில் இதுவரை காலமும் பல்வேறு இடங்களிலும் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புகளுக்கும் மேற்கொள்ளப் பட்ட தாக்கு தல்களுக்கும் ஒவ்வொரு தோட்டா சத்தத்திற்கும் கே.பியின் பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
ஆகவே இவ்வாறு பாரிய அழிவுகளை ஏற்படுத்தக் காரணமாக இருந்து கொடிய நபரைக் கைது செய்து ஒருவருடம் பூர்த்தி யாகியுள்ள நிலையில் அவர்மீது எது விதக் குற்றச்சாட்டும் முன்வைக்கப்படாது. குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல், நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படாமல் சுகபோகமாகவே வாழ வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் நேற்று இடம் பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது கூறினார்

கருத்துகள் இல்லை: