வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

பொன்சேகா குற்றவாளி: இலங்கை ராணுவ நீதிமன்றம்


இலங்கை இராணுவத்தின் முன்னாள் தலைமை தளபதி சரத் பொன்சேகா குற்றவாளி என அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


தண்டனைக் காலம் குறித்தோ, அல்லது எவ்வகையான தண்டனைகள் வழங்கப்படும் என்று, இன்னும் நீதிமன்றம் அறிவிக்காத நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை ராணுவ நீதிமன்றம் ஒருதலைபட்சமாக நடந்துள்ளதாக பொன்சேகா ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்த நிலையில், தற்போது தீர்ப்பு குறித்து அவர் அதிகரப்பூர்வமாக இன்னும் எதுவும் தெரிவிக்கவில்லை.

பொன்சேகா முதலாவது ராணுவ நீதிமன்றத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு வழங்கப்பட்ட பதக்கங்கள், மற்றும் நட்சத்திரங்கள் போன்றவற்றை இலங்கை அரசு பறிமுதல் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் அவருக்கு வழங்கப்பட்ட சீருடைகளையும் அரசு திருப்பிப் பெற்றுக்கொள்ளும் எனச் செய்திகள் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை: