செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

சிந்து சமவெளி'யின் ஏடாகூட கதை!


உயிர் படத்தில் கொழுந்தனார் மீது மோகம் கொண்டு திரியும் அண்ணி கதையை சொல்லி பெரும் எதிர்ப்புகளையும், பெருவாரியான வசவுகளையும் வாரிக் கட்டிக் கொண்ட சாமி, தனது புதிய படமான சிந்து சமவெளியில், மாமனாருக்கும், மருமகளுக்கும் இடையிலான காதல் கதையை சொல்லியிருப்பதாக பரபரப்பு கிளம்பியுள்ளது.
சாமி இயக்கிய உயிர் படத்தில் கொழுந்தனார் மீது மோகம் கொண்டு கட்டிய கணவரையே கொல்லத் துணியும் அண்ணி கதையை சொல்லி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். நாட்டில் இல்லாததை நான் சொல்லவில்லை என்று அதற்கு விளக்கமும் அளித்தார்.

பின்னர் மிருகம் என்ற இன்னொரு வித்தியாசமான படத்தைக் கொடுத்தார் சாமி. தற்போது அவர் இயக்கியிருக்கும் சிந்து சமவெளி படத்திலும் ஏடாகூடமான கதையை கையாண்டுள்ளாராம் சாமி.
இப்படத்தில் மருமகளுக்கும், மாமனாருக்கும் இடையே காதல் மலருகிறதாம். இந்தக் காதலுக்கான காரணத்தையும், சூழலையும் பார்த்தால் யாரும் அதைத் தவறான காதல், கள்ளக்காதல் என்று கூற முடியாது. அந்த அளவுக்கு லாஜிக்கை சரியாக வைத்திருக்கிறாராம் சாமி.
இந்தப் படமும் உயிரைப் போல எதிர்ப்புகளை வாரிக் கட்டிக் கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது

பதிவு செய்தவர்: கோவாலு
பதிவு செய்தது: 09 Aug 2010 11:52 pm
சாமி சார் நீங்க பொழைக்க தெரிந்தவரு ! பிட்டு படம் பார்க்க போனா வீட்டுல திட்டு விழும், நீங்க அதே பிட்டை தமிழில என்ன நாசூக்கா கொண்டு வர்றீங்க! தெய்வம் சார் நீங்க !ஆனா ஒண்ணு நீங்க கல்யாணமானவர்னா ..உங்க அப்பாவை உங்க பொண்டாட்டிகூட சேர்த்து பாக்குறது அசிங்கமா தெரியாதா சார் ? சார் நீங்க ஒரு கூவம் சார்!
பதில் | அவதூறு குறித்து தகவல் தர

பதிவு செய்தவர்: நானும் சினிமாகாரன்
பதிவு செய்தது: 09 Aug 2010 10:25 pm
இங்கு சினிமாவை விமர்சித்து எழுதும் அயோக்கிய பசங்களுக்கு ஒரு கேள்வி? நிங்கள் எல்லாம் யோக்கியம? நிங்கள் படம் பார்த்தது இல்லையா ? ஒரு உலகத்தில் இதுபோல் நடப்பது இல்லையா? சினமா என்பது பொழுது போக்கு, அனால் பவர்புல், அங்கு எது சொன்னாலும் எடுபடும், இதுபோல் சினிமா வருவது நல்லது ,அனால் ஆபாசம் , இரட்டை வசனம் , இல்லாமல் இருந்தால் மக்களுக்கு ஒரு விழிபுனர்வு ஏற்படும் .

கருத்துகள் இல்லை: