வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

தேடப்படுவோர் பட்டியலில் இருந்து நீக்கக்கோரி இலங்கை டக்ளஸ் தேவானந்தா சென்னை உயர்நீதிமன்றத்தில்

தேடப்படுவோர் பட்டியலில் இருந்து நீக்கக்கோரி இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இலங்கை அதிபர் ராஜபட்ச அண்மையில் அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வந்தார். அந்த நாட்டு சிறுதொழில் மேம்பாட்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அவருடன் வந்தார்.

டக்ளஸ் தேவானந்தா மீது சென்னையில் 3 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அவரை கைதுசெய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. டக்ளஸ் தேவானந்தாவை கைதுசெய்ய 16 ஆண்டுகளாக எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் எனவேஇ அண்மையில் இந்தியா வந்த அவரை கைதுசெய்யக் கோரியும் அந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் தன்னை தேடப்படுவோர் பட்டியலில் இருந்து நீக்குமாறு அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

கருத்துகள் இல்லை: