சனி, 14 ஆகஸ்ட், 2010

மண்டபம் முகாமில் அகதிகள் வெளியேற தடை

சுத‌ந்‌திர ‌தின ‌விழாயையொ‌ட்டி ம‌ண்டப‌ம் முகா‌மி‌ல் இரு‌ந்து அக‌திக‌ள் வெ‌ளியேற காவ‌ல்துறை தடை ‌வி‌தி‌த்து‌ள்ளது.

இ‌ந்‌தியா‌வி‌ன் 64வது சுதந்திர தினவிழாவினை சீர்குலைக்க தீவிரவாதிகள் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதையடுத்து முக்கிய நகரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளான மண்டபம் கடற்கரை ஓரங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மண்டபம் முகாமில் தங்கியுள்ள அகதிகள் சுதந்திர தினவிழா நடைபெறும் நேரங்களில் வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்‌றிரவு கடற்கரை பகுதி முழுவதும் காவ‌ல்துறை‌யின‌ர் தீவிர ரோந்தில் ஈடுபட்டனர். இதனா‌ல் அக‌தி முகா‌ம்க‌ளி‌ல் உ‌ள்ள ம‌க்க‌ள் ‌வீ‌ட்டி‌ல் முட‌ங்‌கி ‌கிட‌க்‌கி‌ன்றன‌ர்.

கருத்துகள் இல்லை: