செவ்வாய், 21 ஏப்ரல், 2020

டாக்டர் சைமன் உடலை அடக்கம் செய்ய தடுத்தோர் மீது உயர் நீதிமன்றம்


அமரர் டாக்டர் சைமன்
கனிமொழி கருணாநிதி : தன் உயிரைக்கூட துச்சமென மதித்து சிகிச்சை அளித்துவந்த மருத்துவர் சைமன், சிகிச்சையின் போது ஏற்பட்ட கொரோனா தொற்றால் உயிரிழந்திருக்கிறார். எந்த மக்களுக்காகத் தன் வாழ்நாளெல்லாம் சேவை செய்துவந்தாரோ, அதே மக்களின் ஒரு பிரிவினர் அவருக்கான இறுதி மரியாதையை தடுத்திருப்பது மிகுந்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் தருகிறது.
நமக்காக பாடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் என அனைவரையும் மதிப்பது என்பது கைதட்டுவதோடு நின்றுவிடக் கூடாது. 

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல் எரியூட்டப்பட்ட பின்னரோ அல்லது முறைப்படி புதைக்கப்பட்டுவிட்டாலோ நோய்த்தொற்று மற்றவர்களுக்குப் பரவ வாய்ப்பு இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நம்மைக் காக்கும் பணியில் ஈடுபட்டு காலமானவர்களுக்கு உரிய மரியாதை அளிப்பது நம் கடமை.

கருத்துகள் இல்லை: