வியாழன், 23 ஏப்ரல், 2020

அல்கய்தா , புலிகள் அமைப்புக்கள் போன்று ஆர் எஸ் எஸ் அமைப்பும் தடை செய்யப்படும் ..?

       Chozha Rajan : · ஆர்.எஸ்.எஸ்.சுக்கு அரபு நாடுகள் முடிவு கட்டுமா? ஆர்எஸ்எஸ்சை இந்துத்துவா டெர்ரரிஸ்ட் அமைப்பு என்றும் அதை தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வளைகுடா நாடுகளில் வலுப்பெறத் தொடங்கியுள்ளது. ஆர்எஸ்எஸ்சின் மதவெறி அம்பலமாகி தடைவிதிக்கப்பட்டால், பின்லேடன் அமைப்புக்கும், பிரபாகரன் அமைப்புக்கும் விதிக்கப்பட்ட தடையைப் போல ஆர்எஸ்எஸ் முடக்கப்படும். அதோடு தொடர்பு வைத்திருக்கும் அமைப்புகளான பாஜக உள்ளிட்ட அமைப்புகளுக்கும் ஆபத்துதான்

“thamizhidhayam.com : ஒத்த சைக்கிளை கொண்டு வந்து மொத்த ஊரையும் சரிச்சுப்புட்டியேடானு” ஒரு படத்துல வசனம் வரும்.
இங்கே என்னடான்னா ஒரே ஒரு ட்வீட்டை போட்டுட்டு, ஒட்டு மொத்த சங்கிகளின் கூடாரத்துக்கும் ஒருத்தன் வேட்டு வச்சிருக்கான்.
பாவம் இஸ்லாமிய நாடுகளின் கொந்தளிப்பில் ஆர்எஸ்எஸ்சும், மோடி சர்க்காரும் ஆட்டம் கண்டிருக்கிறார்கள்.

இப்போது சங்கிகள் அரபி மொழியை கற்று வருகிறார்கள். எதுக்காக என்றா கேட்கிறீர்கள்? வேற எதுக்கு மன்னிப்புக் கேட்கத்தான். அவர்களுடைய பிதாமகன்கள் சாவர்க்கரும் வாஜ்பாயும் ஆங்கிலேயர்களிடம் ஆங்கிலத்தில் மன்னிப்புக் கேட்டார்கள். இவர்களோ அரபியில் மன்னிப்பு கேட்கிறார்கள்.
ஆர்எஸ்எஸ் என்ற அமைப்பு இந்துக்களின் பிரதிநிதி அல்ல என்பதையும், இந்தியர்கள் அனைவரும் இஸ்லாமிய வெறுப்பாளர்கள் அல்ல என்பதையும் இப்போதுதான் உலகம் உணரத் தொடங்கி இருக்கிறது.
தவளை தன் வாயால் கெடும், நண்டு கொழுத்தால் வளையில் தங்காது என்ற பழமொழிகளுக்கு சங்கிகளே எடுத்துக் காட்டாக மாறியிருக்கிறார்கள்.
உயிர்க்கொல்லி கொரோனா வைரஸை எதிர்த்து உலகமே போராடிக் கொண்டிருக்கிறது. சீனாவில் பரவத் தொடங்கிய அந்தக் கிருமியை சமாளிக்க அந்த நாடு எடுத்த தீவிரமான நடவடிக்கைகள் தினந்தோறும் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டன.
ஆனால், அந்த நோயை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமல் விட்டு, அதன் பலன்களை உலக நாடுகள் இப்போது அனுபவிக்கின்றன.
கொரோனா வைரஸை ஒரு தொற்று நோயாகத்தான் உலகமே பார்க்கிறது. ஆனால், இந்தியாவில் உள்ள ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக அமைப்புகளைச் சேர்ந்த முட்டாள் சங்கிகளோ, அதை இஸ்லாமிய வெறுப்பை பரப்பும் கருவியாக கையில் எடுத்திருக்கிறார்கள்.
அவர்களுடைய பிரச்சாரத்தை வழக்கம்போலவே வலதுசாரி மீடியாக்களும் சேர்ந்துகொண்டு தீயாய் பரப்புகின்றன. இஸ்லாமியர்களை கண்டால் பயந்து ஒதுங்கும் வகையில் அந்தப் பிரச்சாரம் அப்பாவிகளின் மனதுக்குள் விஷத்தை விதைக்கிறது.
2014ல் மோடி பிரதமராக பொறுப்பேற்றதில் இருந்து கடந்த ஆறு ஆண்டுகளாக இஸ்லாமியர்களை ஒடுக்குவதற்காக பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அந்தச் சட்டங்களை யாரும் எதிர்த்தால் அவர்களை அச்சுறுத்தவும் பல சட்டங்கள் உருவாக்கப்பட்டன.
காஷ்மீர் மாநிலத்தையே சிறைக்கூடமாக்கிய மோடி தலைமையிலான அரசு, இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களையே நாடற்றவர்களாக்கும் நோக்கத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டுவந்தது.
நல்லவேளையாக அந்தச் சட்டத்தை எதிர்த்து இஸ்லாமியர்களுடன் இந்துக்களும் கைகோர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை எதிர்பாராத மோடி அரசு தனது முடிவை அமல்படுத்த முடியாமல் திணறியது. இந்நிலையில்தான், கொரோனா வைரஸை இஸ்லாமியர்களுக்கு எதிராக திருப்பி, அவர்களுக்கு ஆதரவளிக்கும் இந்துக்களின் மனதில் வெறுப்பு விஷத்தை விதைக்க முயன்றது.
இதுவரை இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான பிரச்சாரத்தை நடத்திய இந்துமதவெறியர்கள், தாங்கள் பிழைக்கப் போன அரபு நாடுகளிலும் தங்கள் கைவரிசையை காட்டத் தொடங்கினார்கள். அந்த நாடுகளின் நிறுவனங்களில் முக்கியப் பொறுப்பு வகித்துக்கொண்டே இஸ்லாமிய வெறுப்பைக் கக்கத் தொடங்கினார்கள்.
சமூக வலைத்தளங்களில் அவர்கள் பரப்பிய விஷம் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியது. அதுவே உலகம் முழுவதும் பிழைக்கச் சென்றுள்ள சங்கிகளுக்கு வினையாகியது.
அரபுநாடுகளில் உள்ள அறிவுஜீவிகளும், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களை கடுமையாக கண்டித்துள்ளனர். இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்ட பாஜக ஆதரவாளர்களையும் ஆர்எஸ்எஸ் ஆட்களையும் பதவிகளில் இருந்து தூக்கியடித்துள்ளனர்.
ஆர்எஸ்எஸ்சை தடை செய் என்றும், அந்த அமைப்பு இந்துக்களின் பிரதிநிதி அல்ல என்றும் அரபு நாடுகளில் பிரச்சாரம் வலுப்பெறத் தொடங்கியது. இதையடுத்து, “கொரோனா வைரஸ் இனம், மதம், நிறம், சாதி, எல்லைகளைப் பார்த்து வருவதில்லை. அதை நாம் ஒன்றுபட்டு சகோதரத்துவ உணர்வுடன் எதிர்த்து அழிக்க வேண்டும்” என்று பிரதமர் மோடியே ட்வீட் செய்யும் நிலை உருவானது.
அவரைத் தொடர்ந்து எச்சை.ராஜா, எஸ்.வீ.சேகர், மாலன் நாராயணன், நாராயணன் திருப்பதி போன்ற இஸ்லாமிய வெறுப்பை விதைக்கும் சங்கிகளும் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்கத் தொடங்கிவிட்டார்கள்.
ஆர்எஸ்எஸ்சை இந்துத்துவா டெர்ரரிஸ்ட் அமைப்பு என்றும் அதை தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வளைகுடா நாடுகளில் வலுப்பெறத் தொடங்கியுள்ளது. ஆர்எஸ்எஸ்சின் மதவெறி அம்பலமாகி தடைவிதிக்கப்பட்டால், பின்லேடன் அமைப்புக்கும், பிரபாகரன் அமைப்புக்கும் விதிக்கப்பட்ட தடையைப் போல ஆர்எஸ்எஸ் முடக்கப்படும். அதோடு தொடர்பு வைத்திருக்கும் அமைப்புகளான பாஜக உள்ளிட்ட அமைப்புகளுக்கும் ஆபத்துதான்.
இப்போவே, ஆர்எஸ்எஸ்சையும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பையும் ஒப்பிட்டு பரப்பத் தொடங்கியிருக்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, 53 இஸ்லாமிய நாடுகளில் வாழும் இந்தியர்கள் ஆண்டுக்கு 120 பில்லியன் டாலர்களை இந்தியாவுக்கு அனுப்புவதாகவும், வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்கள் மட்டும் ஆண்டுக்கு 55 பில்லியன் டாலர்களை இந்தியாவுக்கு அனுப்புவதாகவும் அரேபிய அறிவுஜீவியான அப்துர் ரஹ்மான் நாஸர் பதிவிட்டிருக்கிறார். இந்த நாடுகளில் வாழும் இந்தியர்களில் பெரும்பான்மையான இந்துக்கள் மரியாதையாகவும், மனிதநேயத்துடனும் நடத்தப்படுவதாக அவர் கூறியிருக்கிறார். ஆனால், இந்தியாவில் முஸ்லிம்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்று அவர் வினா எழுப்பியிருக்கிறார்.
ஆளும் குடும்பங்கள் இந்தியர்களோடு நண்பர்களாக இருக்கின்றன. நானும் ஒரு அரச குடும்பத்து பெண் என்ற அளவில் இந்துத்துவா ஆட்களின் கொடூர மனப்பான்மையை நான் விரும்பவில்லை. இங்கே பணிபுரியும் அனைவருக்கும் சம்பளம் கொடுக்கிறோம். இந்த மண்ணில் உங்களுக்கான உணவைப் பெற்றுக்கொண்டு, இஸ்லாமியர்களை கிண்டல் செய்வதை கவனிக்காமல் இருக்க முடியாது என்று அரபு இளவரசியான ஹெண்ட் அல் குவாஸ்ஸிமி தனது பதிவில் கூறியிருக்கிறார்.
எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான இஸ்லாமோபோபியா பரவியிருப்பதாகவும், இஸ்லாமியர்களுக்கு எதிரான கொடுமைகளை ஆதாரத்துடன் அனுப்பும்படியும் அரேபிய அறிவுஜீவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இஸ்லாமியர்களுக்கு எதிரான சமூக வலைத்தள பதிவர்களையும் அடையாளம் காட்டும்படி கூறியிருக்கிறார்கள். இதுபோதாதா? இதுவரை துலுக்கர்கள் என்று வீரவாள் சுழற்றிய சங்கிகள் மண்டிபோட்டு இஸ்லாமிய நண்பர்கள் என்று பதிவு போடும் நிலைக்கு வந்துவிட்டார்கள். என்ன செய்வது, பிரிட்டிஷாரிடம் மன்னிப்பு கேட்டு வளர்ந்த சாவர்க்கர், வாஜ்பாய் பரம்பரையாச்

கருத்துகள் இல்லை: