செவ்வாய், 21 ஏப்ரல், 2020

பேரறிஞர் அண்ணா தலையில் கொரோனா .. தினத்தந்தியின் கார்டூன்

 thamizhidhayam.com : 2004ஆம் ஆண்டு நான் சென்னை தினமணியில் சேர்ந்தப்போ, பொறுப்பாசிரியரா எம்.சந்திரசேகரனும், தலையங்க பக்க ஆசிரியரா ராயப்பாவும் இருந்தாங்க.
அப்போவெல்லாம் தினமணி கார்ட்டூன்கள் பிரச்சனைகள் தொடர்பாகத்தான் இருக்கும். தனி மனித தாக்குதல்களை ஆசிரியர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.
துக்ளக் சோ குருமூர்த்தியிடம் சொல்லி, குருமூர்த்தி தினமணி ஓனர்கிட்ட சொல்லி தினமணியில் கார்ட்டூனிஸ்ட்டாகச் சேர்ந்தவன் இந்த மதி. சம்பந்தம் ஆசிரியரா இருந்தப்போ உள்ளே வந்தவன், திமுகவை விமர்சனம் செய்றதுன்னா ரொம்ப ஆர்வமா இருப்பான். அப்படி அவன் போட்ட கார்ட்டூன் எதையாச்சும் முரசொலியில் தூக்கிப் போட்டு, கலைஞர் பதில் எழுதிட்டா இவனுக்கு ஒரே கொண்டாட்டமா இருக்கும். முரசொலி பத்திரிகையை தூக்கிட்டு எல்லோர்கிட்டயும் காட்டி சந்தோஷப்படுவான்.
அதிகபட்சம் கலைஞர் இவனை திட்டி எழுதிட்டா அதுவே இவனுடைய கார்ட்டூனுக்கு கிடைத்த அங்கீகாரம்னு நெனக்கிற கழிசடைப் பயதான் இந்த மதி.

இவனை அய்யர்னு நெனச்சு திட்டுற ஆட்கள் நிறையப் பேர் இருக்காங்க. ஆனால், இவன் திருநெல்வேலி பிள்ளை என்பதுதான் நிஜம். தினமணி ஆசிரியரா வைத்தியநாதன் வந்தப்புறம், இந்த ஆள், தனிநபரை கேவலப்படுத்தி கார்ட்டூன் போடுவதை அதிகமாக்கினான். அப்போவும்கூட கலைஞரும் திமுகவும்தான் இவனுடைய அதிகபட்ச இலக்காக இருந்தது. ஏனென்றால் கலைஞரும் திமுகவும்தான் இவன் கார்ட்டூனை பாத்துட்டு குறைந்தபட்சம் திட்டவாவது செய்வாங்க. மத்த ஆட்களோ, கட்சிகளோ கார்ட்டூனையெல்லாம் ஒரு பொருட்டா நெனக்கிறதே இல்லை.
ஒருகட்டத்தில் தினமணி பேப்பரே தனது கார்ட்டூனால்தான் ஓடுதுன்ற அளவுக்குப் போய்ட்டான். உடனே, இவனை தூக்கி கடாசிட்டான் வைத்தியநாதன்.

இவனுகளை நான் மரியாதைக் குறைச்சலா பேசுறது சிலருக்கு உறுத்தலா இருக்கலாம். நாகரிகம் தெரியாத ஆட்களுக்கு மரியாதை கொடுப்பது எனக்கு பிடிக்காது.
தினமணியை விட்டு வீசப்பட்ட மதி, சும்மாவே குப்பை கொட்டினான். முகநூலில் ஏதாச்சும் கார்ட்டூன்போட்டு அரிப்பை சொறிஞ்சுக்கிட்டு இருந்தான். அப்புறம் மறுபடியும் குருமூர்த்தி சிபாரிசில் தினத்தந்தியில் கார்ட்டூனிஸ்ட்டா சேர்ந்திருக்கான்.
அதுகூட பெரிய அளவில் யாருக்கும் தெரியலை. அவனைப் பத்தி பேச வக்கிறதுக்கு என்ன பண்ணலாம்னு நெனச்சான். அவனுக்கு அண்ணா சிலை கை கொடுத்துச்சு.
அண்ணா மீது அவனுக்கு ஒன்றும் பெரிய மதிப்பு கிடையாது. ஆனால், அண்ணாவின் மதிப்பு அவனுக்கு தெரியும். அண்ணா என்பவர் தமிழ்நாட்டின் அடையாளம் என்பதும், அவர் மீது கைவைத்தால் தனது பெயர் வெளியே வரும் என்பதும் அவனுக்கு தெரியும்.
அண்ணா சிலையை வரைந்து, தலைக்குப் பதிலாக கொரோனா வைரஸின் படத்தை வரைந்து தினத்தந்தியின் கார்ட்டூனாக போட்டான். அவன் நினைத்தது போலவே சமூக வலைத்தளங்களில் அவனைக் காய்ச்சி எடுத்தார்கள். அவனை மட்டுமல்ல, அவனுக்கு வேலைகொடுத்து, அவன் வரைந்த கார்ட்டூனை வெளியிட்ட தினத்தந்தியையும் நார் நாராய் கிழித்து தொங்கவிட்டார்கள்.
தினத்தந்தி ஓனர் அந்தப் பத்திரிகையை தொடங்கியதே திருட்டுப் பணம்தான் என்று சொல்வார்கள். ஆனால், அந்தப் பத்திரிகை சாமானிய தமிழர்களால் வளர்ந்தது. அந்தப் பத்திரிகைக்கு தந்தை பெரியார் தனது நிலத்தையே தானமாக கொடுத்தார். இன்றுவரை அந்த இடத்துக்கு சட்டபூர்வ பத்திரப்பதிவுகூட இல்லை என்பார்கள்.
தந்தி பத்திரிகையின் உரிமையாளர் சிவந்தி ஆதித்தன் என்பார்கள். ஆனால், சிவந்தி ஆதித்தன் தனது சகோதரர் ராமச்சந்திர ஆதித்தனுக்கு உரிய பங்கையே தர மறுத்து விழுங்கியவர். தினத்தந்தி முழுவதையும் தனது பெயரில் இருக்கிறது என்பதற்காக, தானே அபகரித்தவர் என்பார்கள்.
பாவம் ராமச்சந்திர ஆதித்தனுக்கு சில மாலை முரசு பதிப்புகள் மட்டுமே விட்டுத்தரப்பட்டதாக கூறுவார்கள். மாலை முரசு பத்திரிகையில் வேலை செய்யும்போது இதை கேள்விப்பட்டிருக்கிறேன்.
1972 ஆம் ஆண்டு எம்ஜியார் திமுகவிலிருந்து பிரிந்த சமயத்தில், அவருடைய படத்தை படுகேவலமாக சித்திரம் தீட்டியதுதான் தினத்தந்தி. கலைஞர் அரசில் அமைச்சராக இருந்த ஆதித்தனார், அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அப்படியே எம்ஜியார் பக்கம் சாய்ந்து ஜால்ரா தட்டத் தொடங்கினார்.
திமுக செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக கந்தசாமி தினகரன் தொடங்கியபோது, திமுக ஆட்களை தக்க வைப்பதற்காக, திமுக செய்தியையும் போடத் தொடங்கியது தினத்தந்தி.
திமுகவை எதிர்த்தாலும், அதிமுகவை ஆதரித்தாலும், ஆதித்தனாரை கேவலப்படுத்திய தினமலருக்கு எதிராக திமுக கண்டனக் குரல் எழுப்பி இருக்கிறது. தினத்தந்தியை சலூன் பேப்பராக சித்தரித்த தினமலர் விளம்பரத்தையும் கண்டித்திருக்கிறது.
ஆனால், சிவந்தி ஆதித்தன் இப்போது மத்திய பாஜக அரசின் பிடியில் சிக்கியிருக்கிறார். பாஜக என்ற பன்றியோடு சேர்ந்ததால், பன்றியின் உணவையே சாப்பிடத் தொடங்கியிருக்கிறார் தந்தியின் ஒனர். இவர்களுக்கு காலம்தான் பதில் சொல்லும்
Kalai Selvi : 1959 ம் ஆண்டு தினத்தந்தியில் கார்ட்டூன் ஒன்று வெளியாது……
அதில், அண்ணா அவர்கள் நாற்காலியில் அமர்ந்து எழுதிக்கொண்டிருக்க, எழுதிய தாள்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்க, அந்தத் தாள்களை கழுதையொன்று திண்பது போல அமைத்து, கீழே "நாங்கள் சினிமாவுக்கு வசனம் எழுதுவது வீண் போகாது என திமுகவை சார்ந்த தலைவ ர் மு.கருணாநிதி கூறினார்" என வாசகமும் வெளியிட்டது.
இதைப் பார்த்த தலைவர் கலைஞர், தந்தி வெளியிட்ட அதே கார்ட்டூனை எடுத்து முரசொலியில் வெளியிட்டார். அதில், கழுதையின் மீது "தினத்தந்தி" என்று எழுதினார். திமுகவினர் எழுதும் எழுத்துக்களை திண்ணத்தான் இந்தக் கழுதை லாயக்கு எனக்கூறி தந்திக் கழுதையின் மூக்கறுத்தார் கலைஞர்.
அன்றைக்கு மூக்கறுபட்ட தந்திக் கழுதை இன்றும் திருந்தவில்லை .

தாயகம் சுரேஷ் : கள்ள உறவு, கற்பழிப்பு, சிந்துபாத்-லைலா கன்னித்தீவு கார்டூன், டமால்-டுமீல், சதக்-சதக், பக்-பக், திக்-திக், நடிகைகளின் கிசுகிசு, ஆண்டிமடம் என குப்பைகளை நித்தமும் அச்சிலேற்றி எவர் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களின் விரலசைவுக்கேற்ப அங்கம் அசைக்கும் அம்சமான பத்திரிக்கை ஒன்று இந்த தமிழ் திருநாட்டில் உண்டென்றால் அது தந்தி அன்றி வேறேதுமில்லை!!!
கோரோனா நோய் தொற்று பற்றிய கேலிச்சித்திரமாக இந்த சிவப்பு விளக்கு பத்திரிக்கை வரைந்துள்ள கார்டூன் இவர்களின் காகிதகூழாலான மூளையை அப்பட்டமாக காட்டுகிறது!!
நவீன தமிழகத்தின் சிற்பியாக வரலாற்றில் நிற்கிற தலைவர் ஒருவரின் சிலையை கார்டூன் படமாக குத்தலாக போட்டுள்ளது இந்த இரண்டாம் துக்ளக் தந்தி!!!
அதென்ன? இரண்டாம் துக்ளக் என்கிறீர்களா?
அந்த முதல் துக்ளக் சோ ராமாசாமியை உங்களுக்கெல்லாம் தெரியும் தானே?
அந்த அறிவாளி எப்போதுமே செய்வதும் சொல்லுவதும் இரண்டு விசயங்களை தான்..,
1) “நம்மால் முடியாதை யாராவது செய்து விட்டால், அந்த செயலையும், அவர்களையும்,
நக்கல் செய்து அதன் மூலமாக மக்களை குழப்பி விடவேண்டும்”..,
2) “நமக்கு தேவையென்றால், அவர்களை நம்மவர்களாக்கி கொள்வது அல்லது நாம் அவர்களுக்கு பின்புறமாக நின்று பதுங்கி கொள்வது”
இவை தான் அந்த கோமாளியின் அதிகபட்ச அறிவாளித்துவம்!!!
அந்த வழியில் நிற்பது தான் இந்த இரண்டாம் துக்ளக் “தந்தியும்"!!!
கொரோனா தொற்றுக்கு கார்டூன் வரைய தந்தி குழுமம் எந்த தலைவரை தேர்ந்தெடுத்து மறைமுகமாக பகடி செய்துள்ளது தெரியுமா?
முதலில்.., நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய இராணுவத்தை ஆதரித்தது..,
பிறகு..,இந்திய தேசிய காங்கிரஸ்,
பிறகு.., சுயமரியாதை இயக்கம்,
பிறகு.., தமிழ்ராஜ்ஜிய கட்சி..,
பிறகு.., நாம் தமிழர் கட்சி...,
அதனூடாக, தனித் தமிழ்நாடு கோரிக்கை எனப் பல அரசியல் நிலைகளையும் எடுத்து அவற்றில் எதிலும் நிலைத்திராது..,
பின் எந்த திராவிட இயக்க கொள்கைகளை எதிர்த்தாரோ அவர்களிடமே தஞ்சமடைந்து பதவி பெற்று பேரறிஞரிடம் பெற்ற பதவியால் சபாநாயகராகி,
பிறகு கலைஞரிடம் பெற்ற பதவியால் கூட்டுறவுத்துறை அமைச்சராகி...,
பின்னாளில் திராவிட இயக்கத்திலேயே இருந்து மறைந்த ஆதித்தனார் அவர்கள் தலைவராக ஏற்று கொண்ட பேரறிஞர் அண்ணா அவர்களின் சிலையை தான் மறைமுகமாக பகடி செய்கிறது இந்த இரண்டாம் துக்ளக் தந்தி!!!
இத்தனை சிரமப்படுவதற்கு பதிலாக, தங்களின் நிறுவனர் ஆதித்தனாரின் சிலையையே பிரசுரித்திருக்கலாம் இரண்டாம் துக்ளக் தந்தி!!!
அது சரி...,
அதிகார பீடத்தின் நிரந்தர அடிமை நாங்கள் என எழுதி கொடுத்த இந்த கூட்டம் எப்போதுமே இப்படி தான்..,
குறிப்பாக,
எந்த திராவிட இயக்கத்தில் இவர்களின் நிறுவனர் கரைந்து போனாரோ அந்த திராவிட இயக்கங்களின் மீது இவர்களுக்கு எப்போதுமே ஒரு வெளியில் சொல்லமுடியாத ஆத்திரம் உண்டு. (வெளியில் சொன்னால், அதிகாரத்தின் மூலமான வியாபாரம் கிடைக்காமல் போய்விடுமே?)
எப்போதுமே திராவிட இயக்க அரசுகளின் நிழலில் அதிகார பந்தியில் அமர்ந்து கொண்டு, அவர்களின் வியாபார விருந்தில் வழித்து வழித்து தின்று கொண்டே, அதே திராவிட இயக்கங்களுக்கு எதிராகவே நகர்ந்து பழக்கப்பட்டுவிட்ட கூட்டமிது!!!
அதன்வழியில் தான் முதல் துக்ளக்கை சார்ந்த RSS முகவர் மூலமாக பரணையில் கிடந்த தங்கள் கட்சியின் லெட்டர் பேடை எடுத்து, நவீன மபொசி வேடமிட்ட சீமானாருக்கு எடுத்து கொடுத்து, திராவிட இயக்கங்களுக்கு எதிராக தூண்டிவிட்டது!!!
போதாத குறைக்கு,
மத்தியில் இந்து ராஷ்டிர கனவு நாயகர்கள் அதிகாரத்திற்க்கு வந்த பிறகு இந்த துக்ளக்குகள் எல்லாம் ஒரு சேர இணைந்து விட்டன!!!
அதன் விளைவே..., இந்த கூட்டம் இப்போது பேரறிஞரை சீண்டி பார்க்கிறது!!!!
எது எப்படியாயினும்..,
இந்த புதிய வலதுசாரி அரிதாரமிட்ட தந்தி சங்கிகளுக்கு
பேரறிஞர் யார்? அவரின் பலமென்ன? என்பது முற்று முழுதாக தெரியும்..,!!!
ஆயினும்,
இப்படி கீழ்தரமாக செயல்படுவது
அதிகார கூட்டத்தை திருப்தி படுத்த ஒத்துழைக்கிற அசிங்கமான வளைவுகளாக மட்டும் தான் இத்தகைய ஈழிச்செயல்கள் இருக்குமென்பதை சொல்லி கொண்டு...,
சுதந்திர இந்தியாவின் முதல் வலதுசாரி பிரதமரான அடல்பிகாரி வாஜ்பாய் அவர்கள் பிரதமரான பிறகு நாடாளுமன்றத்தில் தன் வார்த்தைகளால் செதுக்கிய உரையை இங்கே நினைவுப்படுத்துகிறேன் இந்த புதிய வலதுசாரி கூட்டத்திற்க்கு!!!
“தமிழ்நாட்டின் வளமான கலாச்சார பாரம்பரியம், பெருமைமிகு சரித்திரத்தின் மீது நான் எப்போதும் மதிப்புடையவன்.
தமிழ்நாடு “என்றாலே” மதிப்புக்குரிய நண்பரான திராவிட இயக்க ஜாம்பவான் அண்ணாதுரை தான் எனக்கு முதலில் நினைவுக்கு வருவார். தமிழ் மக்களின் உணர்வுபூர்வ வீரராக அவர் திகழ்ந்தார். எளிமையான, மிக அன்பான, உயர்ந்த எண்ணம் கொண்ட “மாமனிதர்” அண்ணா. நாடாளுமன்றத்தில் திராவிட கலாச்சாரத்தை உருவாக்கியவர். மிக சிறந்த நாடாளுமன்றவாதி”!!!!
ஆம்..., தந்தி போன்ற அதிகாரத்திற்காக நிறம் மாறும் துக்ளக் கூட்டம், "மாமனிதர்” பேரறிஞர் அண்ணா போன்றோரை உணராமல் போனதில் ஆச்சர்யமேதுமில்லை!!!
#தாயகம்சுரேஷ்

கருத்துகள் இல்லை: