வியாழன், 23 ஏப்ரல், 2020

1972 கலைஞர் கண்ணொளி வழங்கும் திட்டம் .. மருத்துவர் எழிலன் நாகநாதன்


கண்ணொளி திட்டம் ..வல்லரசு ஆகவேண்டுமா? நல்லரசு ஆகவேண்டுமா?
தமிழ்நாடு என்ற மாநிலம் கல்விக்கும் சுகாதாரத்திற்கும் வருவாயில் கிட்டத்தட்ட நாற்பது நான்கு சதவீதம் முதலீடு செய்கிறது
இதே மத்திய அரசு எவ்வளவு செய்கிறது தெரியுமா?
கல்விக்கு மூன்று சதவீதம் .. சுகாதாரத்துக்கு ஒரு சதவீதம்..
திராவிட இயக்க கொள்கை என்ன என்றால் கல்வியும் சுகாதாரமும் எல்லா ஏழைகளுக்கும் சென்று சேரவேண்டும் என்பதுதான்.
அப்போதுதான் ஏற்ற தாழ்வு அற்ற நிலையில் சமுகம் இருக்கும்
இந்த நிலையில்தான் கலைஞரின் கண்ணொளி வழங்கும் திட்டத்தை பற்றி பேச இருக்கிறேன்.
1972   ஆண்டு கலைஞர் கண்ணொளி வழங்கும் திட்ட வரைவை முன் வைக்கிறார்.. Blue print ஐ ரிலீஸ் பண்றார்.
அப்போது தமிழ்நாட்டில் எக்கச்சக்கமான மக்களுக்கு மாலை கண் நோய் .விட்டமின் ஏ குறைபாட்டால் அது வருவது.
ஐம்பது வயசு தாண்டிய நெறைய பேருக்கு கண்ணில புரை Cataract ஆல் பாதிக்க பட்டிருக்காங்க.

ஒரு ஆய்வுல சொல்றாங்க Cataract  ஆல் பார்வை போன பிறகு மக்கள் வேலை இல்லாம நெறைய பேரு உணவில்லாம இறந்து போறாங்க . உணவு பற்றாக்குறையின் அடிப்படையில ..
இதே அவங்களுக்கு cataract    ஆபரேஷன் பண்ணி பார்வையை திருப்பி கொடுத்தாஅவங்க மேலும் பத்து வருஷமாவது வேலை பார்த்து  தங்கள் குடும்பத்தை பார்த்து கொள்ள கூடிய வாய்ப்பு அதிகமாகிறது என்று ஆய்வு   சொல்றது .
இதன் அடிப்படியில இந்த திட்டத்தை அறிமுக படுத்திறாரு.
அஞ்சு மொபைல் யுனிட்டை உருவாக்கிறாரு .
தனியார் அரசாங்கம் எல்லாரையும் சேர்த்து ஒரு டீம் உருவாக்கிறாரு.
Eye Specialists, Nurses ,  optometrists எல்லாரையும் சேர்க்கிறார்.
ஐந்து மாவட்டங்களுக்கும் இந்த மொபைல் யுனிட் வருகிறது .
சென்னைக்கு இரண்டு மதுரைக்கு ஒன்று . கோவைக்கு ஒன்று . தஞ்சாவூருக்கு ஒன்று என்று வருகிறது
இந்த ஒவ்வொரு கிராமமாக போய்கிட்டே இருப்பாங்க .
இந்த மொபைல் யூனிட் வரதுக்கு முன்னாடியே அந்த ஊர்ல இருக்கிற .ஊர்தலைவர்கள் வந்து யார் யார் எல்லாம் விட்டமின் ஏ குறைபாடு இருக்கு?
யார் யாருக்கு எல்லாம் cataract இருக்குன்னு லிஸ்ட் எடுப்பாங்க .
ஒரு பள்ளிகூட வளாகமோ ஒரு கல்யாண மண்டபமோ இந்த மொபைல் யூனிட் வந்து இறங்கும்
அங்க உள்ள இருபது  cataract நிபுனர்கள் வந்து ஆபரேட் செய்வாங்க
ஒவ்வொரு காம்பிலயும் இரண்டாயிரம் ஆபரேஷன் நடந்திச்சு.
ஆயிரக்கணக்கான் மக்களுக்கு விட்டமின் ஏ டிராப்ஸ் டப்லேட் கொடுத்திருத்காங்க.
கண் இன்பெக்ஷனுக்கு ஐ ட்ராப்ஸ் கொடுத்திருக்காங்க
பிறகு பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு கண்ணாடி கொடுத்திருக்காங்க
அங்கு தங்கி இருக்கும் நாட்களில் அவர்களுக்கு உணவு வழங்கி இலவசமாக அவர்களின் வீடுகளுக்கு கொண்டு போய் சேர்த்து இருக்காங்க
இதை வந்து பார்த்த குடியரசு தலைவர் வி வி கிரி சமுக நலத்துறையில்  இந்த மாதிரி இந்தியாவில் எங்குமே நடந்ததில்லை என்று பாராட்டி விட்டு சென்றார்
மேற்கு ஜெர்மனியில் இருந்து வந்த community expert டாக்டர் செர்ச்ல் பெர்க் இந்த மாதிரி ஏழை எளிய மக்களுக்கு இப்படி ஒரு திட்டத்தை உலகில் எங்குமே நடை பெறவில்லை .
டாக்டர் கலைஞர் அதை நடத்தி இருக்கிறார் என்று பாராட்டு பத்திரம் வழங்கி விட்டு சென்றார்


கருத்துகள் இல்லை: