வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

சீனவில் பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை:! ... கொரொனோ வைரஸ் அபாயம் ...

பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை: அரசின் அறிவிப்பால் அதிர்ச்சிவெப்துனியா:  சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து நெருங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 200-க்கும் அதிகமானோர் இறந்துள்ளதாகவும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது >இதனை அடுத்து கொரோனாவைரஸ் பாதிப்பால் ஷாங்காய் நகரில் நடைபெற உள்ள சர்வதேச கால்பந்து போட்டியும் ரத்து செய்யப்பட்டது. அது மட்டுமின்றி உலக மொபைல் மாநாடு சீனாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த மாநாட்டில் நோக்கியா, வோடோபோன் உள்பட பல முன்னணி நிறுவனங்கள் கொரோனாவைரஸ் அச்சத்தின் காரணமாக வர மறுத்து விட்டதால் இந்த மாநாடும் ரத்து செய்யப்பட்டது

இந்த நிலையில் ஜப்பானில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளையும் ரத்து செய்யும் திட்டமும் இருப்பதாக கூறப்படுகிறது இந்த நிலையில் சீனாவில் உள்ள அனைத்து பள்ளிகளும் காலவரையற்ற விடுமுறை என அரசு அறிவித்துள்ளது இதனால் சீனாவில் கொரோனா வைரஸின் தாக்கம் உச்சத்தில் இருப்பது உறுதியாகி உள்ளது<

கருத்துகள் இல்லை: