திங்கள், 10 பிப்ரவரி, 2020

ஜப்பான் கப்பலில் 135 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று.. டைமண்ட் பிரின்சஸ் (Diamond Princess)

Samayam Tamil : 24 மணிநேரத்தில் 65 பேருக்கு வைரஸ் தொற்று பரவியுள்ளது.
இவர்களில் 45 பேர் ஜப்பானைச் சேர்ந்தவர்கள். அமெரிக்கர்கள் 11 பேர். <
யோகோஹமா துறைமுகத்தில் உள்ள கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான பயணிகளைக் கொண்ட கப்பலில் வைரஸ் தொற்று மேலும் 65 பேருக்குப் பரவியுள்ளது. டைமண்ட் பிரின்சஸ் (Diamond Princess) என்ற சொகுசு கப்பல் கடந்த மாதம் 20ஆம் தேதி ஜப்பானிலிருந்து புறப்பட்டு ஹாங்காங்குக்கு 25ஆம் தேதி சென்றது. பின், ஹாங்காங்கிலிருந்து பிப்ரவரி 3ஆம் தேதி ஜப்பான் திருப்பியது. இதில் பயணம் செய்த ஹாங்காங்கை சேர்ந்த 80 வயது முதியவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், ஜப்பான் வந்த கப்பல் யோகோஹமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது. கப்பலில் உள்ள ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு தினமும் மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது. இதுவரை 135 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
கடந்த 24 மணிநேரத்தில் 65 பேருக்கு வைரஸ் தொற்று பரவியுள்ளது. இவர்களில் 45 பேர் ஜப்பானைச் சேர்ந்தவர்கள். அமெரிக்கர்கள் 11 பேர். பேருக்கு தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. தவிர அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா நாட்டை சேர்ந்தவர்களும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


57 நாடுகளைச் சேர்ந்த 3700 பயணிகளுடன் வந்த இந்த கப்பலில் 138 இந்தியர்கள் உள்ளனர். இவர்களில் 132 பேர் கப்பல் பணியாளர்கள். 6 பேர் பயணிகள். கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான பயணிகளுடனேயே இருக்கும் இவர்களில் சிலர் தங்களை மீட்க உதவி கோரியுள்ளனர். இதுவரை இந்தியர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.

கொரோனா வைரஸ் 9 நாட்கள் உயிரோடு இருக்கும்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை

இச்சூழலில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர் கப்பலுக்கு ஜப்பான் அரசு ராணுவத்தை அனுப்பப்போவதாகத் தெரிவிக்கின்றனர். ராணுவத்தினர் கப்பலில் நிலைமையை கட்டுக்குள் வைத்திருப்பதற்காகவோ பயணிகளை பாதுகாப்பாக வெளியேற்றவோ அனுப்பப்படலாம் எனவும் கூறுகின்றனர்.

சீனாவுக்கு அடுத்தப்படியாக ஜப்பானில்தான் அதிக அளவில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளது. ஜப்பானில் 89 பேருக்கு வைரஸ் தொற்று பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: