புதன், 25 செப்டம்பர், 2019

PMC.வங்கிக்கு நெருக்கடி! .. இந்திய வங்கி துறை குரங்கின் கையில் பூமாலை ?

Karthikeyan Fastura : பஞ்சாப் மகாராஷ்டிரா கோவாப் என்ற PMC வங்கிக்கு RBI முக்கிய வேலை
நிறைய தடைகள் விதித்துள்ளது. அது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. அடுத்த ஆறு மாதத்திற்கு யாருக்கும் கடன் கொடுக்கக் கூடாது. வங்கி டெபாசிட்டில் இருந்து யாரையும் ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுக்க அனுமதிக்க கூடாது, புதிதாக கடன் வாங்கவும் கூடாது, வங்கி டெபாசிட் வாங்கவும் அனுமதி இல்லை, வேறு எதிலும் முதலீடும் செய்யக்கூடாது என்று கிட்டத்தட்ட வங்கியின் எல்லா நடவடிக்கைகளையும் முடக்கி போட்டுள்ளது. நிலுவையில் இருக்கும் கடன்களை வசூலிப்பது தான்
வங்கியின் போர்டு கலைக்கப்பட்டு RBIஆல் நியமிக்கப்பட்ட தலைமை வங்கியை மேலாண்மை செய்யும்.
ஆனால் வங்கிக்கு சொந்த மான சொத்துக்களும், டெபாசிட்டும் தாக்குபிடிக்கும் அளவில் இருக்கையில் ஏனிந்த திடீர் நடவடிக்கை என்று வங்கி ஊழியர்களும் கூட குழம்பிப் போயுள்ளார்கள்.
காரணம் Irregularities என்று சொல்கிறார்கள். ஆனால் என்னவென்று தெரியவில்லை. ஊழல் நடந்திருக்கிறது என்றால் யார் காரணம் என்றும் தகவல் இல்லை.

இதனால் பிற மாநகர கூட்டுறவு வங்கிகளும் பயந்து போயுள்ளது. அங்குள்ள வாடிக்கையாளர்களும் முதலீட்டை எடுக்க முயற்சிக்கிறார்கள்.
ஏற்கனவே காஷ்மீர் வங்கியும் மாநில அரசியல் காரணமாக முடக்கப்பட்ட நிலையில் இருக்கிறது.
வங்கி இணைப்புகள் வேறு பெருத்த இடியாப்ப சிக்கலில் வங்கிகளையும், வாடிக்கையாளர்களையும் மாட்டி விட்டிருக்கிறது.
RBIல் வைக்கப்பட்ட டெபாசிட்டில் வேறு கைவைக்கப்பட்டுள்ளது. இந்தியன் வங்கி அமைப்பு மிக மிக வலிமையான அமைப்பாக நம்பிக்கை மிகுந்த நூறு கோடி மக்களின் ஆதரவை பெற்ற ஒன்றாக இருந்தது. இன்று அதை எவ்வளவு அடித்து நொறுக்க முடியுமோ அவ்வளவு மோசமாக அடித்து நொறுக்கிக் கொண்டே வருகிறார்கள். எதிர்கட்சிகள் குழம்பி போயுள்ளன எதற்காக போராடுவது என்று. தினம் தினம் ஒரு பர்னிச்ச்சரை உடைத்தால் அவர்களும் என்ன தான் செய்வார்கள்.
அரசு வங்கிகள், அரசுநிதி நிறுவனங்கள், இன்சுரன்ஸ் அமைப்புகள் எல்லாவற்றின் மீதான காலம் காலமாக இருந்த நம்பிக்கையை உடைத்துக்கொண்டே வருகிறார்கள்.
எப்போதும் கெட்டதிலும் ஒரு நல்லது இருக்கும் என்று தேடுவேன். ஆனால் இதில் என்ன நல்ல விளைவு இருக்கும் என்று இன்றும் புரியவில்லை.

கருத்துகள் இல்லை: