சனி, 28 செப்டம்பர், 2019

துப்பரவு பணிக்கு முதுகலை பயின்றவர்கள் போட்டி ..

    Vivekanadan T : கொடுமை ..கொடுமை ...இன்று நியூஸ் 18 தொலைக்காட்சியில் பார்த்த செய்தி அதிர்ச்சியை கொண்டு வந்தது.. அது , துப்பரவு பணிக்கு முதுகலை பயின்றவர்கள் போட்டி - படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காத அவலம் என்று செய்தி .....
வடக்கில் ஒருத்தர் படிச்சவன் எல்லாம் பக்கோடா விக்க சொல்லுறான்.....ஆனால் , தமிழகத்தில் திட்டமிட்டு மத்திய மாநில அரசு வேலைவாய்ப்புகளில் தமிழ்நாட்டுக்குள்ளேவே தமிழர்களுக்கான வாய்ப்புகளை புறக்கணித்தது மட்டுமல்லாமல் சம்ஸ்கிருதம் ஹிந்தி திணிப்பை வெவ்வேறு ரூபத்தில் நுழைப்பதை பற்றி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை தவிர பிஜேபி கட்சியின் அடிமை கட்சிகள் வாயை திறப்பதில்லை...
எல்லாவற்றையும் விட கொடுமை...As on January 2017, across all ten ministries, unfilled reserved vacancies for SCs figure at 8223, STs at 6955 and OBCs at 13,535. Out of the 92,589 total backlog vacancies for the year ending 2016, some 63,876 were filled up...
மேலும் ஒட்டுமொத்தமாக கடந்த ஐந்து வருடங்களில் நாடு முழுவதும் 24 லட்சம் அரசுப் பணியிடங்கள் நிரப்படாமல் இருப்பதாக தினமணி மற்றும் News 18 சொல்லி உள்ளது( ஜூலை அண்ட் ஆகஸ்ட் edition- URL link comment section ) ...
கடைசியாக எட்டு ஆண்டுகள் கிழித்துவிட்டு , தமிழகத்தில் இப்போழுது தான் அவசரஅவசரமாக பன்னாட்டு கம்பெனிகளுடன் ஒப்பந்தம் என்று முதல்வர் பேசி இருக்கிறார்...இனிமேல் தான் தொழிற்சாலை கட்டமைப்பு தொடங்கி என்று அப்புறம் தான் வேலைவாய்ப்பு அறிவிப்பு வரும்...... நிலைமை மோசமாகி போய் விட்டது என்பதை உணர்த்தி இருக்கிறது இந்த முதுநிலை பட்டதாரிகள் விண்ணப்பம்.....
என்ன செய்யப்போகிறார்கள் அதிமுக அரசும் ஆளும் பார்ப்பனிய பிஜேபி அரசுக்கும்..?.....ஒன்று மட்டும் தெரிகிறது...எல்லா பொதுத்துறை நிறுவங்களை தனியாரிடம் தாரை வார்த்து சமூகநீதியை ஒழிக்க பார்க்கிறார்கள் போல..

கருத்துகள் இல்லை: