சனி, 28 செப்டம்பர், 2019

ஐ நாவில் இம்ரான் கான் பேச்சு வீடியோ

Kalai Selvi : Yes இம்ரான் பேச்சு மிக மிக அருமை மொழிவள ஆளுமை, கருத்துச் செரிவுடன் உண்மையான அக்கறையுடன் செம்மையாக பஞ்ச் பேச்சு

மின்னம்பலம் :  ஐ.நா சபையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் உரை காஷ்மீரில் தூண்டுதலை ஏற்படுத்த வாய்ப்புள்ளதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம், ஜம்மு காஷ்மீரில் சிறப்பு வரையறை சட்டநீக்கத்திற்குப் பின் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், “காஷ்மீரில் இந்தியா தனது கட்டுப்பாடுகளை நீக்கியவுடன் ஒரு இரத்தக் களரி இருக்கும்” என ஐ.நா பொதுக்குழு கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று(செப்.27) பேசியிருந்தார்.
நேற்றி நள்ளிரவில் இம்ரான் கான் பேசியதைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான காஷ்மீரிகள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து, இம்ரானுக்கு அதரவாகவும், காஷ்மீரின் சுதந்திரத்திற்காகவும் கோஷங்களை எழுப்பினர்.
இன்று(செப்.28) ஒலிபெருக்கிகளுடன் பொருத்தப்பட்ட போலீஸ் வேன்கள், ஸ்ரீநகரின் சில பகுதிகளில் இயக்க கட்டுப்பாடுகள் குறித்து பகிரங்க அறிவிப்புகளை வெளியிட்டன.
அதே நேரத்தில் எந்தவொரு எதிர்ப்பையும் தடுக்க கூடுதல் படைகள் அங்கு நிறுத்தப்பட்டிருக்கின்றன. ஸ்ரீநகரின் முக்கியமான வணிக சந்தைக்குள் நுழைவதற்கும் தடைகள் விதிக்கப்பட்டன.
இம்ரான் கான் காஷ்மீர் குறித்து ஐ.நாவில் பேசுகையில், “ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்ததிலிருந்து, அங்கிருக்கும் மக்களுக்கு எந்த தகவல்தொடர்பும் கிடைக்கவி்ல்லை. காஷ்மீரில் இருக்கும் மக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும். அங்குள்ள அரசியல் தலைவர்களை விடுவிக்க வேண்டும்” எனப் பேசினார்.
நேற்று நடந்த ஆர்ப்பாட்டங்கள் குறித்து சர்வதேச பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ஒரு காவல் துறை அதிகாரி "இம்ரான் கானின் பேச்சுக்குப் பின்னர், நேற்று இரவு ஸ்ரீநகர் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் ஏற்பட்டன. அதன் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது" எனக் கூறினார். அதே சமயம், நேற்று இரவு மக்கள் கற்களை வீசி பாதுகாப்புப் படையினருடன் மோதியதாகவும், அவர்களை கலைக்க போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை பயன்படுத்தினர் என்றும் மற்றொரு அதிகாரி தெரிவித்தார்.

ராதாமனோகர் : இந்திய பிரதமரும் பாகிஸ்தான் பிரதமரும் ஐ நாவில் பேசிய பேச்சுக்கள் .. .. ஒரு பக்குவமடைந்த அரசியல் தலைவர் எப்படி பேச வேண்டும் என்பதை பாக் பிரதமர் இம்ரான் கான் வெளிப்படுத்துகிறார் .. இந்திய பிரதமர் மோடியின் பேச்சு ஒரு கலரி ரசிகர்களை மனதில் வைத்து போடும் வெற்று கோஷம் போலிருந்ததை உலகம் கவனிக்க தவறவில்லை .இது என் கருத்து .. இந்திய பிரதமர்கள் என்றால் உலக அரங்கில் இதுவரை காலமும் ஒரு பெரு மதிப்பு இருந்தது ..
குறிப்பாக ராஜீவ் காந்தி பேசிய பொழுது முழு உலகுக்கும் அவர் ஒரு கதாநாயகன் ஆக கருதப்பட்டார் ..
ராஜீவ் காந்தியின் ஆளுமையை உலகம் கண்டு கொண்டது . உலகை ஏமாற்ற முடியாது .
மோடியை பிரதமராக தெரிவு செய்ததின் மூலம் இந்திய வாக்காளர்கள் (அல்லது EVM இயந்திரம்) பாகிஸ்தானுக்கு பெரும் வரத்தை வழங்கி உள்ளார்கள்.

கருத்துகள் இல்லை: