செவ்வாய், 24 செப்டம்பர், 2019

வட இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் சக்தி வாய்ந்த நில நடுக்கம்..


பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் - 5 பேர் பலி?தினத்தந்தி :பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டு உள்ளது; இதன் தொடர்சியாக வட இந்தியாவிலும்  உணரப்பட்டு உள்ளது. . இஸ்லாமாபாத் பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலும்  சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் சாலைகள் பிளந்து துண்டிக்கப்பட்டு உள்ளது.
கட்டிடங்கள் சேதம் அடைந்து உள்ளன.  பாகிஸ்தானில் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி உள்ளது. சியால்கோட், சர்கோதா, மன்சேரா, குஜராத், சித்ரால், மலாக்கண்ட், முல்தான், ஷாங்க்லா, பஜபூர், ஸ்வாட், சாஹிவால், ரஹீம் யர் கான்
 மிர்பூர் ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் மீர்பூர் மாவட்டத்தில் சாலைகள்  பலத்த சேதம் அடைந்தன.
இந்த நிலநடுக்கத்தால் 5 பேர் வரை உயிர் இழந்து இருக்கலாம் என கூறப்படுகிறது . நூற்றுக்கும் அதிகமானபேர் காயம் அடைந்து உள்ளனர். > வட மாநிலங்களின் பல இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியானது. பஞ்சாப், ஜம்மு காஷ்மீரிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது

கருத்துகள் இல்லை: