
தமிழகத்தின்
இரு மசோதாக்களையும் மத்திய அரசு நிராகரித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
கிராமப்புற மாணவர் நலனை துச்சமென மதிக்கும் மத்திய அரசின் முடிவு
கண்டனத்திற்குரியது.
நீட் விலக்கு மசோதா
நிராகரிப்பு தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக கண்டன தீர்மானத்தை
சட்டப்பேரவையில் கொண்டுவந்து உடனே நிறைவேற்ற வேண்டும்.
நீட் விலக்கு மசோதாக்களுக்கு ஒப்புதல் பெறுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முதலமைச்சர் மேற்கொள்ள வேண்டும்.
சட்டமன்றத்தால்
நிறைவேற்றப்பட்ட நீட் மசோதாக்களை நிராகரிக்கும் முடிவினை, மத்திய அரசு
உடனடியாக மறுபரிசீலனை செய்து தமிழக சட்டமன்றத்தின் உணர்வுகளை மதிக்க
வேண்டும்.
நீட் மசோதா நிராகரிக்கப்பட்ட தகவலை
முதல்வரோ, சுகாதாரத்துறை அமைச்சரோ சொல்லவில்லை. மசோதாவை நிராகரித்தது
கூட்டாட்சி தத்துவத்தையும், நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் கேலி புரியும்
செயலாகும் என தெரிவித்துள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக