ஞாயிறு, 30 ஜூன், 2019

கேரளா ஜாதி இந்துக்களின் பட்டியலின வெறுப்பு .. இஸ்லாமிய மாணவர் சேர்க்கை ..Muslim parents break Kerala school's 'Dalit only' tag

Devi Somasundaram : · பட்டியலின குழந்தைகள் படித்ததால் அந்த பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்க்க சாதி இந்துக்கள் மறுக்க மிக நீண்ட காலமா பட்டியலின பள்ளி என்றே சொல்ல பட்டு வந்தது ..சமிபத்தில் இஸ்லாமியர்கள் தங்கள் குழந்தைகளை அந்த பள்ளியில் சேர்த்து பட்டியலின பள்ளி என்பதில் இருந்து பொது பள்ளி யாக மாற்றி உள்ளனர் ... இது குஜராத்ல இல்ல ..கம்யூனிஸ் தேசம் ,100% கல்வி அறிவு தேசம் கேரளத்தில் நடந்தது ......தமிழ் நாடா இருந்தா, கருணானிதி ஒன்றும் யோக்கியரில்லை, சூத்திர திராவிடம்னு கம்யூனிஸ்ட்கள் ஒரு ரைட்டப் எழுதி திட்டி இருப்பார்கள்...
vikatan.com - kumaresan-m : 
மாணவர்களுக்கு கேக் ஊட்டி வரவேற்பு பட்டியலினப் பள்ளியில் மாணவர்களை சேர்த்த பெற்றோர்கேரளாவில் கோழிக்கோடு அருகே பெரம்பரா கிராமத்தில் பட்டியலின மாணவர்கள் படித்ததால், அந்தப் பள்ளியில் மற்ற சமூகத்தினர் தங்கள் குழந்தைகளைப் படிக்கச் சேர்க்காமல் தவிர்த்து வந்தனர். பல ஆண்டு காலமாகப் பட்டியலின மாணவர்கள் மட்டுமே இங்கு படித்து வந்தனர். பிற சமூக மக்கள் தங்கள் குழந்தைகளை இங்கே சேர்த்தாலும், பட்டியலின மாணவர்களுடன் சேர்ந்திருக்க மாட்டார்கள். தங்களுக்குத் தனி இடம் ஒதுக்க வேண்டுமென்று பிடிவாதம் பிடித்தனர். குழந்தைகளிடம் பிரிவினை காட்டக் கூடாது என்பதால் பள்ளி நிர்வாகமும் பிற சமூக மக்களைச் சேர்க்க வற்புறுத்தவில்லை.

சாதிய பாகுபாடுகளைக் களைய வேண்டிய தருணம் இது என்றும் எடுத்துக் கூறினார்கள். பல முறை எடுத்துக் கூறியும் பிற சமூக மக்கள் அதை ஏற்கவில்லை.  ஆனால், இதே ஊரைச் சேர்ந்த இஸ்லாமிய மக்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க முடிவு எடுத்தனர்.
இதனால், ஆசிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்ததோடு, பள்ளியில் சேர்ந்த குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர். பட்டியலின மாணவர்கள் தங்களுடன் படிக்கச் சேர்ந்த புதிய மாணவர்களுக்கு கேக் ஊட்டினர். மதியம் அனைவரும் தரையில் அமர்ந்து மதிய உணவும் சாப்பிட்டனர்.

கருத்துகள் இல்லை: