;கேள்வி: ஜெயக்குமார் மட்டும் தனிப்பட்ட முறையில் செய்தியாளர்களை சந்திக்கவில்லை. அனைத்து அமைச்சர்களும் செய்தியாளர்களை சந்தித்து இந்த கருத்தை முன் வைத்திருக்கிறார்கள். மேலும் செய்தியாளர்கள் சந்திப்புக்கு முன்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசியிருக்கிறார்கள்.
;வெற்றிவேல்: கட்சியில் 10 அமைச்சர்கள் சேர்ந்து எடுக்கக் கூடிய முடிவை ஏற்க முடியாது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை. முதல்வரை சந்தித்தப் பிறகு செய்தியாளர்களை சந்திப்பதாக கூறுவதை நான் நம்ப தயாரில்லை. எடப்பாடி பழனிச்சாமி சொல்லட்டும் யோசிக்கலாம்.
;கேள்வி : ஏப்ரல் 17ஆம் தேதி நாங்கள் தினகரனை ஒதுக்கி வைப்பதாக அறிவித்தோம். அதனை ஏற்று அவர் ஒதுங்கியிருப்பதாக பேட்டி அளித்தார். அந்த முடிவை தினகன் தொடர வேண்டும் என்று கூறியிருக்கிறார்களே.
வெற்றிவேல்: ஒதுங்கி இருப்பதாக அறிவித்தார். பின்னர் சிறை சென்று 42 நாள் கழித்து வெளியே வந்தார். இரு அணியும் இணைந்திருக்கும் என்று நினைத்தார். இரட்டை இலையை மீட்பதற்கான பணிகளை செய்திருப்பார்கள் என்று நினைத்தோம். செய்யவில்லை. தமிழ்நாடு முழுவதும் ஒன்றரை கோடி தொண்டர்கள் எடுக்க வேண்டிய முடிவை 10, 15 அமைச்சர்கள் எடுப்பதை ஏற்க முடியாது. இவ்வாறு கூறினார். நக்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக