
டெல்லி நாடாளுமன்றத்தில் உள்ள ஏடிஎம் மையங்களில்கூட பணம் எடுப்பதற்கு போலீஸ் பாதுகாப்பு போடும் நிலை உள்ளது. அங்குள்ள வங்கியில் நான் பழைய ரூபாய் நோட்டை மாற்றி புதிதாக பெற்ற ரூபாய் 2000 நோட்டை டெல்லி, சென்னை, நெல்லை என வரும் வழி எங்கும் மாற்ற முயன்றும் சில்லறை பெற முடியவில்லை. இதுதான் இன்றைய இந்தியாவின் நிலை” என்று அவர் பேசினார்.
அதையடுத்து, இன்று காலை நெல்லையில் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களிடம் கூறிய பேட்டியில், “ரூபாய் நோட்டு பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம். மத்திய அரசின் திடீர் அறிவிப்பால் சாமானிய மக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். நாட்டில் உள்ள கறுப்புப்பணம் அனைத்தும் தங்க கட்டிகளாக மாற்றப்பட்டு விட்டது. நகை கடைகளை விடிய, விடிய திறந்து விற்பனை செய்வதற்கு யார் அனுமதி கொடுத்தது? பெட்ரோல் பங்க், மருத்துவமனை, ரயில் நிலையங்கள் போன்ற இடங்களில் டிசம்பர் 3௦ஆம் தேதி வரை ரூபாய் 500,1000 நோட்டுகளை வாங்க அனுமதிக்க வேண்டும்” என்றார்.மின்னம்பலம்.காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக