இந்த நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் வந்து பார்த்த போது அவர் தங்கியிருந்த அறை திறக்கப்படாமல் இருந்தது. நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. இதைதொடர்ந்து போலீசார் வரவழைக்கப்பட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது முத்து வெங்கடேஸ்வரன் வேட்டியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
அவரது உடல் பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பணிச்சுமையா?
தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், துணை சூப்பிரண்டு தனபால், கோட்டாட்சியர் செல்வி, தாசில்தார் சீதாலட்சுமி ஆகியோர் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக யாரிடமோ செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அவர் தற்கொலைக்கு பணிச்சுமை காரணமா அல்லது குடும்ப பிரச்சினையா என்று, அருப்புக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகையன் விசாரணை நடத்தி வருகிறார்.தினத்தந்தி.காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக